செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்- ஜிம்பாப்வேயிற்கு 309 ரன் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2018-07-13 11:22 GMT   |   Update On 2018-07-13 11:22 GMT
இமாம்-உல்-ஹக்கின் அபார சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #ZIMvPAK
ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், ஜிம்பாப்வே- பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் அசாம் 20 ரன்னும், சோயிப் மாலிக் 22 ரன்னும், ஆஷிப் அலி 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



ஆனால் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 128 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. 5 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இமாம்-உல்-ஹக்கின் 2-வது சதம் இதுவாகும். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடி வருகிறது.
Tags:    

Similar News