செய்திகள்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2018-07-12 14:48 GMT   |   Update On 2018-07-12 14:48 GMT
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #ThailandOpen #PVSindhu
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து ஹாங் காங் வீராங்கனை யிப் புய் யின்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-16, 21-14 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



காஷ்யப் 18-21, 21-18 19-21 என கடுமையாக போராடி ஜப்பான் வீரரிடம் வீழந்தார். அதேபோல் பிரணாய் 18-21, 14-21 என நேர்செட் கணக்கில் இந்தோனேசிய வீரரிடம் வீழ்ந்தார்.
Tags:    

Similar News