செய்திகள்

டி20யில் முதல் விக்கெட்டுக்கு 1110 ரன்கள் குவித்து தவான் - ரோகித் சர்மா ஜோடி சாதனை

Published On 2018-07-04 10:23 GMT   |   Update On 2018-07-06 13:29 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை தவான் - ரோகித் சர்மா படைத்துள்ளனர். #ENGvIND
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நீண்ட காலமாக தொடக்க ஜோடியாக களம் இறங்கி அசத்தி வருகிறார்கள். இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர்.

நேற்று இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிறது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.



இந்த 7 ரன்கள் மூலம் இருவரும் இணைந்து முதல் ஜோடிக்கு 1110 ரன்கள் குவித்துள்ளனர். இதன்மூலம் முதல் ஜோடிக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன் வார்னர் - வாட்சன் ஜோடி 1108 ரன்கள் சேர்த்திருந்தது. இதை தற்போது தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. கப்தில் - வில்லியம்சன் ஜோடி 870 ரன்கள் குவித்து 3-வது இடத்தையும், அயர்லாந்தின் போர்ட்டர்பீல்டு - ஸ்டிர்லிங் ஜோடி 763 ரன்கள் குவித்து 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
Tags:    

Similar News