செய்திகள்

உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு- சோயிப் மாலிக்

Published On 2018-06-26 13:45 GMT   |   Update On 2018-06-26 13:45 GMT
பாகிஸ்தான் அணியின் 36 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #ShoaibMalik
பாகிஸ்தான் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். 36 வயதான இவர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஃபிட்டாக இருந்தால் டி20 போட்டியில் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.



19 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 35.22 ஆகும். அத்துடன் 154 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன்கள் அடித்ததோடு ஓய்வு பெற்றார்.
Tags:    

Similar News