செய்திகள்

வெளிநாட்டவர்களுடன் உடலுறவு வேண்டாம் - ரஷ்ய எம்பி எச்சரிக்கை

Published On 2018-06-14 22:38 GMT   |   Update On 2018-06-14 22:38 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என ரஷ்ய எம்பி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #FIFAWorldCup #FIFA2018 #NoSexWithForeigners

மாஸ்கோ:

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் ரஷியா, சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியது. பொதுவாக ஒலிம்பிக் உள்பட சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாலியல் தொழில் அதிக அளவில் நடக்கும். அந்த வகையில் நேற்று தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க ரஷியாவிற்கு ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்களை திருப்திப்படுத்த ரஷ்யாவில் உள்ள பாலியல் தொழிலாளிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யா எம்.பி டமாரா பிலெட்னியோவா அந்நாட்டு பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன், ரஷ்ய பெண்கள் யாரும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். 



கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது, அந்த போட்டியை காண வந்த வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ரஷ்ய பெண்கள் பலர் உடலுறவு வைத்துக் கொண்டதால் பல பெண்களுக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன என்பதாலே ரஷ்ய எம்பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என கூறப்படுகிறது. #FIFAWorldCup #FIFA2018 #NoSexWithForeigners
Tags:    

Similar News