செய்திகள்

மேல்முறையீடு தோல்வி- உசைன் போல்டின் ஒரு பதக்கம் பறிபோனது போனதுதான்

Published On 2018-06-01 10:21 GMT   |   Update On 2018-06-01 10:21 GMT
விளையாட்டுக்கான நடுவர் மன்றம் நெஸ்டா கார்ட்டரின் மேல்முறையீட்டை நிராகரித்ததால் உசைன் போல்டின் பதக்கம் 8-ஆக குறைந்துள்ளது. #bolt
உலகின் அதிவேக ஓட்டப் பந்தைய வீரராக கருதப்படுபவர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் ஓட்டப் பந்தையங்களில் 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக் தொடரில் மூன்றிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் வரலாற்று சாதனைப் படைத்திருந்தார்.

2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் பெற்ற ஒலிம்பிக் தொடரின்போது உசைன் போல்ட் உடன் 4X100 ஓட்டத்தில் நெஸ்டா, மைக்கேல் பிராட்டர், ஆசாபா பொவேல் ஆகியோர் இணைந்து ஓடினார்கள்.

ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக பெரிய சர்ச்சை எழுந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களின் மாதிரிகளை திரும்பவும் சோதனை நடத்தியது. அப்போது நெஸ்டா ஊக்கமருந்து பயன்டுத்தியது தெரியவந்தது.



இதனால் 4X100 ஓட்டத்தில் வென்ற ஜமைக்கான அணியின் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. இதனால் உசைன் போல்ட் ஒரு பதக்கத்தை இழந்தார். இந்த முடிவை எதிர்த்து நெஸ்டா விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் உசைன் போல்டின் பதக்கம் பறிபோனது போனதாக உள்ளது. உசைன் போல்ட் வரலாற்றில் 8 பதக்கங்கள் பெற்றதாகவே எழுதப்படும்.
Tags:    

Similar News