செய்திகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்

Published On 2018-05-23 23:15 GMT   |   Update On 2018-05-23 23:15 GMT
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார். #Tejaswini #Gold #MunichWorldCup
புதுடெல்லி:

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் 621.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மயிரிழையில் பின்தங்கிய சக வீராங்கனை அஞ்ஜூம் மோட்ஜில் 621.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ்வினி சவாந்த் சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் செயின்சிங் 627.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்ற இந்தியர்கள் ககன் நரங், சஞ்ஜீவ் ராஜ்புத் ஏமாற்றம் அளித்தனர்.  #Tejaswini #Gold #MunichWorldCup
Tags:    

Similar News