ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்

Published On 2018-05-07 21:53 IST   |   Update On 2018-05-07 21:53:00 IST
கேன் வில்லியம்சன் அரைசதத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvRCB
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஹேல்ஸ், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவான் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

8.2 ஓவரில் 48 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் ஷாகிப் அல் ஹசன் உடன் இணைந்து அணியை மீட்டார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 150-ஐ தொடும் நிலை ஏற்பட்டது.



கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 32 பந்தில் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். அதன்பின் வந்த யூசுப் பதான் 12 ரன்னில் வெளியேறினார். 19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் யூசுப் பதான், சகா ஆகியோரை க்ளீன் போல்டாக்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஒவர் முடிவில் 143 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். இந்த ஓவரில் ஐதராபாத் 3 ரன்களே எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

Similar News