செய்திகள்

ஐபிஎல்- கொல்கத்தாவிற்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2018-04-21 10:11 GMT   |   Update On 2018-04-21 10:11 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #KKRvKXIP
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் அணியில் மேகித் சர்மா நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூட் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News