செய்திகள்

குளோப் கால்பந்து விருது: சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு

Published On 2017-12-29 15:12 GMT   |   Update On 2017-12-29 15:12 GMT
கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் சார்பில் வழங்கப்படும் 2017-ம் ஆண்டுக்கான ‘குளோப் கால்பந்து விருது’ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo
கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கிளப்புகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘குளோப் கால்பந்து விருது’கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் சிறந்த அணிக்கான விருதையும், ஷிடேன் சிறந்த பயிற்சியாளருக்கான விருதையும் பெற்றனர். ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த விருதை வாங்க ரொனால்டோ நேரடியாக வரவில்லை. இத்தாலியில் இருக்கும் அவர், வீடியோ கான்பரஸ் மூலம் விருதை பெற்றுக் கொண்டார்.
Tags:    

Similar News