செய்திகள்

கோலி - கும்ப்ளே இடையே என்ன நடக்கிறது என தெரியவில்லை: கங்குலி

Published On 2017-06-01 06:19 GMT   |   Update On 2017-06-01 06:20 GMT
கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-

கோலி - கும்ப்ளே இடையே என்ன நடக்கிறது என தெரியவில்லை. அதை பற்றி பேச இப்போது சரியான நேரம் இல்லை என நினைக்கிறேன்.

பயிற்சியாளர் பதவி என்பது கேப்டனுக்கு உதவியாக இருக்க வேண்டும். கேப்டன் என்பவர் களத்தில் வழி நடத்துபவராக நடத்த அவருக்கு பயிற்சியாளர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையே நான் நம்புகிறேன்.

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை என்றால் கேப்டனும், பயிற்சியாளரும். கடும் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள் என்றார்.
Tags:    

Similar News