செய்திகள்

50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556

Published On 2017-05-25 10:30 GMT   |   Update On 2017-05-25 10:31 GMT
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் பாஸல் மெஹ்மூத் இண்டர்-கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றொரு அணியுடன் மோதியது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் பிலால் இர்ஷாத் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ், பவுண்டரிகளாக விளாசினார். 175 பந்துகளை சந்தித்து கடைசி வரை அவுட்டாகாமல் 9 சிக்ஸ், 42 பவுண்டரிகளுடன் 320 ரன்கள் குவித்தார்.

பிலால்- ஜாகீர் உசைன் ஆகியோர் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தனர். பிலாலின் அதிரடியால் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் 50 ஓவரில் 556 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய எதிரணி 145 ரன்னில் சுருண்டது. இதனால் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் 411 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியின் மோகித் அலாவத் அவுட்டாகாமல் 300 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News