செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

Published On 2017-05-02 03:49 GMT   |   Update On 2017-05-02 03:49 GMT
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்ட்டில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் விகாஸ் கிருஷ்ணன், கவுரவ் பிதூரி, அமித் பான்கல் ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்ட்டில் நடந்து வருகிறது. இதில் 75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், தாய்லாந்து வீரர் பதோம்சாக்கை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற இந்திய வீரர்கள் கவுரவ் பிதூரி (56 கிலோ) அமித் பான்கல் (49 கிலோ) ஆகியோரும் கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
Tags:    

Similar News