செய்திகள்

வார்னர், தவான், வில்லியம்சன் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

Published On 2017-04-28 16:36 GMT   |   Update On 2017-04-28 16:36 GMT
வார்னர், தவான் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் அரைசதத்தால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் அணியின் வார்னர், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. வார்னர் 25 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர் உடன் அரைசதம் அடித்தார். அதனைத்தொடர்ந்து தவான் 31 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

சரியாக 10 ஓவரில் ஸ்கோர் 107 ரன்னாக இருக்கும்போது வார்னர் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். தவான் 48 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.



கேன் வில்லியம்சன் 27 பந்தில் நான்கு பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் இசாந்த் சர்மா, கரியப்பா தலா நான்கு ஓவர்கள் வீசி முறையே 41, 42 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News