செய்திகள்

ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்

Published On 2017-04-14 21:43 IST   |   Update On 2017-04-14 21:43:00 IST
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13-வது போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்.
ஐ.பி.எல். 2017 சீசனின் 13-வது லீக் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ரகானே ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிபாதி உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. திரிபாதி 17 பந்தில் 33 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்மித் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ், அங்கீத் ஷர்மா தலா 25 ரன்னும், மனோஜ் திவாரி 31 ரன்னும் எடுக்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணி சார்பில் டை ஹாட்ரிக் விக்கெட் உடன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

Similar News