செய்திகள்
ரன் சேசிங் செய்யவே விருப்பம்: விராட் கோலி
பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கும் தொடங்கும் போட்டியில் சேஸிங் செய்யவே விருப்பம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலி தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார். தற்போது காயத்தில இருந்து மீண்ட விராட் கோலி, மும்பை அணிக்கெதிராக இன்று களம் இறங்குகிறார். பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
போட்டி இரவு 8 மணிக்குள் முடிந்து விடும் என்பதால் பனித்தாக்கம் இருக்காது. இதனால் சேஸிங் செய்யவே விரும்புகிறோம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் அணிக்கு திரும்பி உள்ளதால் மாற்றங்கள் இருக்கும். பகல் நேரத்தில் பெங்களூரு ஆடுகளம் ரன் சேஸிங் செய்ய உதவும். எனவே இன்றைய போட்டியில் ரன் சேஸிங் செய்யவே விரும்புகிறோம்.
கடந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெளியூர் ஆட்டங்களில் வெற்றி பெற்றோம். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். இதுதான் மிக முக்கியம்’’ என்றார்.
போட்டி இரவு 8 மணிக்குள் முடிந்து விடும் என்பதால் பனித்தாக்கம் இருக்காது. இதனால் சேஸிங் செய்யவே விரும்புகிறோம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் அணிக்கு திரும்பி உள்ளதால் மாற்றங்கள் இருக்கும். பகல் நேரத்தில் பெங்களூரு ஆடுகளம் ரன் சேஸிங் செய்ய உதவும். எனவே இன்றைய போட்டியில் ரன் சேஸிங் செய்யவே விரும்புகிறோம்.
கடந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெளியூர் ஆட்டங்களில் வெற்றி பெற்றோம். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். இதுதான் மிக முக்கியம்’’ என்றார்.