செய்திகள்

ஐபிஎல்: பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

Published On 2017-04-10 17:46 GMT   |   Update On 2017-04-10 18:46 GMT
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.
பெங்களூரு:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன், விஷ்ணு சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கையை காட்டினார். அவர் களத்தில் இருந்த வரை அணியின் ஸ்கோர் மளமளெவன ஏறியது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆரோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மனன் ஓஹ்ரா 21 பந்துகளில் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அம்லா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபக்கத்தில் கேப்டன் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Similar News