செய்திகள்
புனேவில் 12 ரன்னில் 7 விக்கெட், இன்று 16 ரன்னில் 5 விக்கெட்: இந்தியாவின் மோசமான பேட்டிங்
புனேவில் 11 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்த இந்தியா, இன்று 16 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மோசமான பேட்டிங் தொடர்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறும் என்று அனைவராலும் கணிக்கப்பட்டது.
ஆனால், புனேவில் கடந்த 23-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. புனே ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைமையில் இந்தியா இருந்தது. 94-வது ரன்னில் ராகுல் அவுட் ஆனார். பின்னர் இந்தியா 105 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி 12 ரன்னில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் இந்தியாவால் அதில் இருந்து மீளமுடியவில்லை.
அபிநவ் முகுந்தை அவுட்டாக்கிய சந்தோஷத்தில் ஸ்டார்க்
இந்தியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்ற மோசமான பேட்டிங் இனிமேல் இருக்காது’’ என்றார்.
ஆனால், இன்று பெங்களூருவில் தொடங்கிய 2-வது போட்டியிலும் இந்தியா பேட்டிங் வரிசை மண்ணைக் கவ்வியுள்ளது. லோகேஷ் ராகுலைத் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 174-வது ரன்னில் அஸ்வின் அவுட் ஆனார். அதன்பின் இந்தியா 189 ரன்களில் ஆல்அவுட் ஆனது. கடைசி 16 ரன்னில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.
90 ரன்கள் சேர்த்த லோகோஷ் ராகுல்
பெங்களூரு ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் வெடிப்பு காணப்பட்டது. அந்த இடத்தை மையப்புள்ளியாக வைத்து லயன் 8 விக்கெட்டுக்களை அள்ளிவிட்டார். புனேவில் தொடங்கிய இந்தியாவின் சொதப்பல் பேட்டிங், பெங்களூரிலும் தொடர்கிறது.
ஆனால், புனேவில் கடந்த 23-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. புனே ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே டர்ன் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைமையில் இந்தியா இருந்தது. 94-வது ரன்னில் ராகுல் அவுட் ஆனார். பின்னர் இந்தியா 105 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி 12 ரன்னில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் இந்தியாவால் அதில் இருந்து மீளமுடியவில்லை.
அபிநவ் முகுந்தை அவுட்டாக்கிய சந்தோஷத்தில் ஸ்டார்க்
இந்தியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்ற மோசமான பேட்டிங் இனிமேல் இருக்காது’’ என்றார்.
ஆனால், இன்று பெங்களூருவில் தொடங்கிய 2-வது போட்டியிலும் இந்தியா பேட்டிங் வரிசை மண்ணைக் கவ்வியுள்ளது. லோகேஷ் ராகுலைத் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 174-வது ரன்னில் அஸ்வின் அவுட் ஆனார். அதன்பின் இந்தியா 189 ரன்களில் ஆல்அவுட் ஆனது. கடைசி 16 ரன்னில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.
90 ரன்கள் சேர்த்த லோகோஷ் ராகுல்
பெங்களூரு ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் வெடிப்பு காணப்பட்டது. அந்த இடத்தை மையப்புள்ளியாக வைத்து லயன் 8 விக்கெட்டுக்களை அள்ளிவிட்டார். புனேவில் தொடங்கிய இந்தியாவின் சொதப்பல் பேட்டிங், பெங்களூரிலும் தொடர்கிறது.