செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட்: மேற்கு மண்டல அணி வெற்றி

Published On 2017-02-14 03:22 GMT   |   Update On 2017-02-14 03:22 GMT
மும்பையில் நேற்று நடந்த சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டல அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கு மண்டல அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை :

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டல அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹர்பஜன்சிங் தலைமையிலான வடக்கு மண்டலம்-பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான மேற்கு மண்டலம் அணிகள் மோதிய ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய வடக்கு மண்டல அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. கம்பீர் 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய மேற்கு மண்டல அணி 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் பார்த்தீவ் பட்டேல் 56 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

Similar News