செய்திகள்

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி ராஜினாமா

Published On 2017-02-09 10:23 GMT   |   Update On 2017-02-09 10:23 GMT
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தவர் அசார் அலி. சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் அணிக்கு அசார் அலி கேப்டனாக இருந்தார். இந்த தொடரில் பாகிஸ்தான் 1-4 என படுதோல்வியடைந்தது. இதனால் அசார் அலி மீது விமர்சனம் எழுந்தது. மேலும் அனைத்து வகை கிரிக்கெட்டிற்கும் ஒரே நபரை கேப்டனாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

இந்நிலையில் இன்று அசார் அலி தனது ஒருநாள் அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் டி20 கேப்டன் சர்பிராஸ் அஹமது ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News