செய்திகள்

20 ஓவர் தொடரையும் இந்தியா வெல்லும்: விராட் கோலி

Published On 2017-01-26 14:06 IST   |   Update On 2017-01-26 14:06:00 IST
இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருப்பதால் 20 ஓவர் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கான்பூர்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல 20 ஓவர் தொடரையும் கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இங்கிலாந்து அணி 20 ஓவர் ஆட்டத்துக்காக இடது கை வேகப்பந்து வீரரான மில்சை புதுமுக வீரராக அறிமுகப்படுத்துகிறது. 90 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய அவரது பந்துவீச்சை கண்டு நாங்கள் கவலைப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருப்பதால் 20 ஓவர் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி பலத்துடன் திகழ்கிறது. இதனால் 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது சவாலானது. அனுபவம் வாய்ந்த வீரர்களும், புதுமுக வீரர்களும் அணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News