செய்திகள்

மாநில நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு

Published On 2016-11-29 10:37 GMT   |   Update On 2016-11-29 10:37 GMT
மாநில நீச்சல் போட்டிக்கு தமிழக அணியில் விளையாட ஈரோடு கலை மகள் கல்வி நிலைய 6-ம்வகுப்பு மாணவி இடம் பிடித்துள்ளார். இந்த மாணவியை ஈரோடு மாவட்ட கலெக்டர் பாராட்டி மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.

ஈரோடு:

குஜராத் மாநிலம் அகமதபாத் ராஜ்கோட் என்ற இடத்தில் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த போட்டியில் விளையாடும் தமிழக அணியில் விளையாட ஈரோடு கலை மகள் கல்வி நிலைய 6-ம்வகுப்பு மாணவி தங்கம் ரூபினி இடம் பிடித்துள்ளார். இந்த மாணவியை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டி மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.

மேலும் மாணவி தங்கம் ரூபினியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாராஜன், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் ஆகியோரும் பாராட்டினர்.

தமிழக அணியில் இடம் பிடித்த மாணவி தங்கம் ரூபினி நீச்சல் “டையிங்” பிரிவில் பங்கேற்கிறார்.

Similar News