செய்திகள்
வில்வித்தையில் அதானு தாஸ் காலிறுதிக்கு முன்னேறுவாரா? - தென்கொரியா வீரருடன் இன்று மோதல்
ரியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தென்கொரியா வீரருடன் இன்று மோதும் அதானு தாஸ் காலிறுதிக்கு முன்னேறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் பங்கேற்றார். அவர் ரேங்கிங் சுற்றில் 5-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) முன்னேறினார்.
இந்த சுற்றில் அதானுதாஸ் 6-0 என்ற புள்ளி கணக்கில் நேபாள வீரர் முக்டர் ஜித்பெகதுரை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் (ரவுண்ட் 16) கியூபா வீரரை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் தென்கொரிய வீரர் லீ செங்யுன்னுடன் அதானுதாஸ் மோதுகிறார். இந்த ஆட்டம் மாலை 5.45 மணிக்கு நடக்கிறது. இதில் வென்று கால் இறுதிக்கு அதானுதாஸ் முன்னேறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பிய்லா தேவி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி தோற்று வெளியேறி இருந்தது. இதன் மூலம் பெண்கள் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
இந்த சுற்றில் அதானுதாஸ் 6-0 என்ற புள்ளி கணக்கில் நேபாள வீரர் முக்டர் ஜித்பெகதுரை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் (ரவுண்ட் 16) கியூபா வீரரை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் கால் இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் தென்கொரிய வீரர் லீ செங்யுன்னுடன் அதானுதாஸ் மோதுகிறார். இந்த ஆட்டம் மாலை 5.45 மணிக்கு நடக்கிறது. இதில் வென்று கால் இறுதிக்கு அதானுதாஸ் முன்னேறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பிய்லா தேவி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி தோற்று வெளியேறி இருந்தது. இதன் மூலம் பெண்கள் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.