null
மீனா மலரும் நினைவுகள்: ஆடிவந்தேன்... ஆடிவந்தேன்...
- கழுத்தில் சுற்றி கிடக்கும் பாம்பும் எனது வலது கை அருகில் படம் எடுத்தபடி நிற்க வேண்டும்.
- தமிழகத்தின் கோவில் மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி தான்.
ஆத்தாடி...
பாம்பா... ஆ...
சாமி கெட்-அப் என்றதுமே நடிப்பதற்கு ஒரு விதமான பயம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பயத்துடன்தான் பாளையத்தம்மன் படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் ஒரு காட்சியை பற்றி விளக்கினார்கள். அதாவது அம்மன் கெட்-அப்பில் நான் வலது கையை ஆசி வழங்குவது போல் வைத்திருக்க வேண்டும். அப்போது கழுத்தில் சுற்றி கிடக்கும் பாம்பும் எனது வலது கை அருகில் படம் எடுத்தபடி நிற்க வேண்டும். இப்படி போட்டோக்களில் சாமி படங்களை பார்த்திருப்போம். நல்லாத்தான் இருக்கும். நிஜத்தில் அப்படி நிஜ பாம்பையே கழுத்தில் போட்டுக் கொண்டு நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் நிஜபாம்பை கழுத்தில் போட்ட படி நடிக்க சொன்னார் ராமநாராயணன் சார்.
சார்... பாம்புன்னாலே எனக்கு ரொம்ப பயம்சார். என்னால் முடியாது சார் பிளீஸ்... என்று நான் அவரிடம் கெஞ்ச... அவரோ 'பிளீஸ்மா... இந்த ஒரு காட்சிதாம்மா படத்துக்கே உயிர். பாம்பை நினைத்து பயப்படாதே! அதன் வாயை கட்டித்தான் வச்சிருக்கோம். கடிக்காது. தைரியமா இரு என்று என்னிடம் கெஞ்சினார்.
என் பயத்தை போக்க என் கண் முன்னால் ஒரு ஊழியரின் கழுத்தில் அந்த பாம்பை சுற்றி போட்டார்கள். "அதோ பாரு ங்க... இப்படித்தான் இருக்கும். எதுவும் செய்யாது." என்று நம்பிக்கையூட்டினார்கள்.
பாம்பாட்டியும் வந்தார். அவரும் தன் பங்குக்கு பாம்பை கையில் வைத்து கொண்டு அப்படி இப்படி போட்டு காட்டினார். 'அவருக்கென்ன...? பாம்புடன் பல நாட்கள் பழகியவர்'. ஆனால் நமக்கு பாம்பை பார்த்தாலே கை, கால்கள் உதறல் எடுக்கிறதே?
நான் என்ன சொன்னாலும் படக்கு ழுவினர் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் அரைகுறை மனதுடன் சரி என்று சம்மதித்தேன். அது மட்டுமா? கழுத்தில் சுற்றி போடப்பட்ட பாம்புடன் அம்மன் வேடத்தில் நின்று அம்மனுக்கே உரித்தான தெய்வீக புன்னகை யையும் முகத்தில் தவழவிட வேண்டும் என்று டைரக்டர் காட்சியை பற்றி விளக்கினார். அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் பாருங்க...! எப்படியோ ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்து விட்டேன்.
மதுரை மீனாட்சி...!
தமிழகத்தின் கோவில் மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி தான். நகரம் என்று பெயர் பெற்ற மதுரை வழியாக பல தடவை படப்பிடிப்புகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனது கிடையாது. அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பது தான் உண்மை.
அந்த வாய்ப்பும் பாளையத்து அம்மன் அருளால் கிடைத்தது. ஒரு பாடல் காட்சி மீனாட்சி அம்மன் கோவிலில் நடத்தப்பட்டது. எனது பெயரிலேயே ஒரு கோவில் இருப்பது போல் மதுரை மீனாட்சியை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சி. கோவிலுக்குள் சென்றதும் அதன் பிரமாண்டம் என்னை மிகவும் கவர்ந்தது.
காலங்களால் அழியாத கலை வண்ணம் நிறைந்த அந்த கோவிலில் ஷூட்டிங் நடந்தது கூடுதல் சந்தோசத்தை தந்தது. பாளையத்து அம்மா நீ பாச விளக்கு... உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு...
என்ற பாடலும் அதற்கு முந்தைய சரண வரிகள் ஒலிக்கும் போதும் அம்மனின் ஆவேச நடனத்துக்கு ஏற்ப வெளி வரும் உடுக்கை ஒலியுடன் குரவை சத்தமும் இணைந்த இசையும் நிஜமாகவே மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியதை என்னால் அனுபவித்து உணர முடிந்தது. அது வேற லெவலாக இருந்தது. அதை விவரிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிட்டத்தட்ட மெய் மறந்து ஆடினேன். பக்தி படம் என்றால் பரவசமாக இருக்கும் என்று சும்மா சொல்ல வில்லை போலும்!
பாளையத்து அம்மன் பக்தி படம் தான். ஆனால் பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் ரசித்து கேட்கப்பட்டது. இந்த படத்தில் தான் முதன் முதலாக தலையில் கரகம் வைத்து ஆடினேன்.
ஆடி வந்தேன்... ஆடி வந்தேன்... அஞ்சு குடைக் காரி...
பாடி வந்தேன்... பாடி வந்தேன்... பாண்டியனார் தேவி...
என்ற கரகாட்ட பாடல் சூப்பர் ஹிட்.
நான் பாம்பு என வேம்பு என மாறுகிற
சாதி. மாரி இவ சன்னதியில் மாறாது நீதி... இந்த பாடல்களெல்லாம் அந்த காலத்தில் தியேட்டர்களையே அதிர வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். கர காட்ட ஸ்டைலில் ஆடிய அந்த டான்சும் வித்தியாசமாக அமைந்தது. எல்லோரையும் கவர்ந்தது. பக்திமணமும், கிராமத்து இசை வாசனையும் படம் முழுக்ககமக மத்தது.
பார்த்தவர்கள் அனைவரையும் மெய்சிலிர்த்து ரசிக்க வைத்தது. மீனா கழுத்தில் எப்படியாவது பாம்பு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
தொடரும்...