ஆரோக்கிய வாழ்விற்கு ஹோமியோபதி மருத்துவம்
- பல்வேறு சுவாச சம்மந்தமான நோய்களில் சளியுடன் அல்லது வறட்டு இருமலாக இருக்கும்.
- பெருகுடல் புண்ணில் அடிவயிறு வலி, ரத்த கடுப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் உடல் எடை குறைதல் பிரச்சனை இருக்கும்.
நோய் நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
நோயின் தன்மையை அறிந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து முழுமையாக சிகிச்சை அளித்தால் நோய் பூரணமாக குணமடையும் என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப ஹோமியோபதி மருந்து செயல்படுகிறது.
இன்றைய மருத்துவத்துறையில் பல்வேறு நோய்களை பக்க விளைவுகளின்றி குணப்படுத்துவதில் ஹோமியோபதி மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இம்மருத்துவமுறையானது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் ஆங்கில மருத்துவரான சாமுவேல் ரெடரிக் ஹனிமன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
பொதுவாக சிகிச்சையின் போது மருந்துகள் அதிக அளவில் கொடுக்கப்படுவதால் போது பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுத்துவதை அவர் கண்டறிந்தார். எனவே மருந்துகள் அளவில் மிகவும் குறைக்கப்பட வேண்டும் என்பதனால் ஹோமியோபதி எனும் மருத்துவத்தில் மருந்துகள் மிகக்குறைந்த அளவில் கொடுக்கப்படுகின்றது. மேலும் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப நோயை நோயால் குணப்படுத்துதல் என்ற அடிப்படையில் உருவானது இம் மருத்துவம். ஒத்த நோய்க்குறியீடுகளை ஒத்த நோய்க்குறியீடுகளால் குணப்படுத்துவதே இம்மருத்துவத்தின் அடிப்படை.
உடலில் ஏற்படும் பல்வேறு கிருமிகளால் உண்டாகும் நோய் தொற்றுகளில் கிருமிகளை நேரடியாக அழிக்காமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி இயற்கையான முறையில் நோயை குணப்படுத்துவதே இம்மருத்துவ முறையாகும். ஹோமியோபதி மருத்துவத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மற்றும் ஆண், பெண் என அனைவருக்குமான மருத்துவமாக திகழ்கிறது.
குழந்தைகளுக்கான டான்சில் கட்டிகள் (தொண்டையில்), வயிற்றுப் போக்கு, தோல்வியாதிகள், காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றிற்கும் சிறப்பு சிகிச்சை உண்டு.
சுவாச கோளாறுகள்:
சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை உண்டு. சைனஸ் என்பது மூக்கின் அருகில் உள்ள காற்றுப் பைகளில் அழற்சியினால் சீழ்கட்டு ஏற்பட்டு தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து சளி வருதல் மற்றும் காய்ச்சல் இருக்கும்.
ஆஸ்துமா என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதில் இழப்பு அதாவது மூச்சு வாங்குதல் உட்கார்ந்து இருக்கும் போதும், மேலும் படுக்கும் போதும், இரவிலும் அதிகமாக இருக்கும். இருமலும் இருக்கும். சளி அதிகம் வருவதில்லை. உடல் இளைத்திருக்கும்.
இருமல்:
பல்வேறு சுவாச சம்மந்தமான நோய்களில் சளியுடன் அல்லது வறட்டு இருமலாக இருக்கும். தொண்டையில் ஏற்படும் அழற்சி மற்றும் நோய்த்தொற்று, மூச்சுக்குழல் தொற்று, காற்றுப்பைகளில் ஏற்படும் அழற்சி தொற்று போன்றவைகளால் தொடர் இருமல் இருக்கும்.
குடல் சார்ந்த பிரச்சனைகளான வாய்ப்புண், வயிற்றுப்புண், சிறுகுடல், பெருகுடல் புண் மற்றும் மூலம், பவுத்திரம் போன்ற வியாதிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி பக்கவிளைவுகள் அற்ற ஹோமியோ மருந்துகளின் மூலமாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்புண்ணால் மேல் வயிற்றில் எரிச்சல், வயிறு உப்பசம், புளியேப்பம், நெஞ்சுகரிப்பு போன்றவை இருக்கும். பெருகுடல் புண்ணில் அடிவயிறு வலி, ரத்த கடுப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் உடல் எடை குறைதல் பிரச்சனை இருக்கும்.
தோல் வியாதிகளான தோல் அழற்சி, சொரியாசிஸ், படர்தாமரை, வெண்புள்ளிகளுக்கு சிகிச்சை உண்டு.
தோல் அலர்ஜி, கை, கால்களில் தோலில் சிரங்கு போன்றும் நீர் வடிதல் இருக்கும். மேலும் தோல் தடித்து கருத்து காணப்படும்.
சொரியாசிஸ்:
தலை, காதின் பின்புறம், கை, கால் மூட்டுகளின் பின்புறம் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கும். வெண் செதில்கள் உருவாகி கொட்டும். மிகுந்த அரிப்பு, எரிச்சல் இருக்கும்.
படர்தாமரை:
தொடை உட்பகுதி, கை, கால்களில் படை போன்று இருக்கும். தோல் கருத்துவிடும். மிகுந்த அரிப்பு, எரிச்சல், இருக்கும்.
வெண்புள்ளிகள்:
முகம், உதடு, கை, கால் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். மேற்கண்ட அலர்ஜி, சொரியாசிஸ், வெண் புள்ளிகள் இவை அனைத்துக்கும் மரபியல் பின்னணி உண்டு. மரபியல் சார்ந்த பிரச்சனைகளில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தி குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்தாக ஹோமியோபதி திகழ்கிறது.
மேலும் மூட்டுவலி, முழங்கால் வலி, கை, கால்களில் வலி, வீக்கம் மற்றும் சரவாங்கி நோய், ஆர்த்தரைட்டிஸ் போன்ற நோய்களுக்கும் பக்க விளைவுகள் அற்ற ஹோமியோ மருந்து உண்டு. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்களை ஹோமியோபதி மருந்துகளால் குணப்படுத்த முடியும். முகப்பரு, பொடுகு, முடி உதிர்தல், தைராய்டு பிரச்சனைகளுக்கும் சிறப்பு சிகிச்சை உண்டு.
பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை கோளாறுகள், சினைப்பை, நீர்க்கட்டிகளுக்கு சிறந்த மருந்துகள் உண்டு. குழந்தையின்மைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சிக்கும், ேஹாமியோபதியில் சிறப்பு சிகிச்சை உண்டு.
இம்மருத்துவத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான அரசால் அங்கீகரிக்கப்பட்ட லைசன்ஸ் பெறப்பட்ட மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு நோய்களுக்கு ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட மருந்துகளாலும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹோமியோ மருந்துகள் செறிவூட்டப்படுவதனால் இதில் நச்சுத் தன்மையோ, கெமிக்கலோ கிடையாது. ஆகையால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அனைத்து பிரச்சனைகளுக்கும் நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் நாள்பட்ட நோய்கள் அனைத்தும் முழுமையாக குணப்படுத்தப்படுகிறது.