சிறப்புக் கட்டுரைகள்

தீய சக்திகளை விரட்டும் தியானம்!

Published On 2024-04-15 12:15 GMT   |   Update On 2024-04-15 12:16 GMT
  • சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் இயற்கையிலேயே அவர்கள் உடலில் இருந்து நறு மணம் வீசியவாறே இருக்கும்.
  • அதிக சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பின்றி மந்தமாகி விடுவர்.

கோடை காலம் வந்து விட்டது. எத்தனை முறை குளித்தாலும் வியர்த்து கொட்டுகின்றது. இதோடு எங்கு சென்றாலும் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவு துர்நாற்றம் உடலில் இருந்து வீசுகின்றது.

சென்ட், பவுடர், ஜவ்வாது என நறுமண பூச்சுகளை பூசிக் கொள்கின்றோம். வாசனை நன்கு இருக்க வேண்டும் என்பதற்காக இவைகளை பூசிக் கொள்கின்றோம். பெண்கள் பொதுவிலேயே மஞ்சள் பூசுவார்கள். மணம்மிக்க பூக்களை வைத்து கொள்வார்கள். வீட்டில் பூஜை செய்யும் போது ஊதுவத்தி, சாம்பிராணி, தசாங்கம் என தூபம் போடுவார்கள்.

சரி இவற்றினை எல்லாம் எதற்காகச் செய்கின்றார்கள்? இந்த வாசனைகள் நம்முடன் சேர்ந்து நம்மிடமும் அதன் குணமாக நறுமணம் வெளிப்படும். இதனை 'வாசனை' என்போம். சிலர் நல்ல சென்ட் போட்டு வரும் போது என்ன வாசனை என்கின்றோம். ஒவ்வொரு உடலில் இருந்தும் அவரவர் குணம், உணவு முறை, உழைப்பு, சுற்றுப்புற சூழல் இவற்றுக்கேற்ப ஒருவித வாசனை வெளிப்படும். இதனை வைத்துதான் மோப்ப நாய்களை பழக்கி போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.

இந்த உடலுக்கு குளிர்ச்சியும், நன்மையும் வரும் விதமாகத்தான் 'வாசனை குளியல் பொடி' பயன்படுத்தப் படுகின்றது. அந்த பொடியில் உள்ள பல மூலிகைகளின் குணங்கள் நம்முடைய குணமாக மாறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதில் சுகாதாரம் கிடைக்கின்றது. மன அமைதி கிடைக்கின்றது. நம்மிடம் பேச வருபவர்களுக்கும் ஒர் மதிப்பினை நம் மீது உருவாக்குகின்றது.

சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் இயற்கையிலேயே அவர்கள் உடலில் இருந்து நறு மணம் வீசியவாறே இருக்கும். அவர்கள் நிலை என்பது வேறு. சாதாரண மனிதர்களாகிய நாம் அன்றாடம் இருவேளை குளிக்க வேண்டும். செயற்கையான நறுமணங்களைத் தவிர்த்து இயற்கை நறுமணங்கள், குளியல் பொடிகளை உபயோகிக்கலாம்.

சாம்பிராணி, தசாங்கம், ஜவ்வாது, மருதாணி பூ, வசம்பு போன்றவற்றினைக் கலந்து தூபம் போடலாம். வீடு முழுக்க காண்பிக்கலாம். இதனுடன் வெண் கடுகினையும் சேர்த்துக் கொள்ள தீய சக்திகள், கண் திருஷ்டிகள் நீங்கும்.

இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும்போது வெற்றிலை, பாக்கு, பழம், 2 கிராம்பு, 2 ஏலக்காய் வைத்து நைவேத்தியம் செய்யலாம். இறைவன் பாடல்கள், நாமங்கள் சொல்லும் போது சில பக்தர்கள் வாயில் 2 ஏலக்காய் போட்டு மென்று விட்டுதான் சொல்வார்கள்.

பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதன் காரணம் அவரது மன எண்ண வாசனை நம்மையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்குத்தான். பிறருக்கு கொடுத்தாலும் அதனை தூய்மையாய் சுத்தம் செய்து விட்டு கொடுக்க வேண்டும்.

தண்ணீர் தீய சக்திகளை விரட்டும் என்பதால்தான் வாசல் தெளிப்பது, வீடு கழுவுவது, அன்றாடம் குளிப்பது என்பதனை நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளனர்.

அதே போல் நாம ஜெபத்திற்கும் அதிக பலன் உண்டு.

* 20 நிமிடம் நாம ஜெபம் செய்தால் அதாவது வேறு எந்த நினைப்பும் இல்லாமல் ஜெபம் செய்யும்போது அது தவம் ஆகின்றது.

* 20 நிமிடம் நம் கர்மாக்களை நீக்க, பாவங்களை நீக்க முயற்சி செய்ததாகின்றது.

* ஆன்மீக பாதையில் 20 நிமிடங்கள் பயணித்துள்ளீர்கள்.

* 20 நிமிடம் வேத பாராயணம் செய்துள்ளீர்கள்.

* 20 நிமிடங்கள் உண்மையாக தீயது எதுவும் நினைக்காது இருந்துள்ளீர்கள்.

* 20 நிமிடம் சத்தம் செய்யாது அமைதி காத்துள்ளீர்கள்.

* 20 நிமிடங்கள் உங்களை உங்கள் பலன்களை கட்டுப்படுத்தியவர் ஆவீர்கள்.

கமலி ஸ்ரீபால்

* புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

* கலியுகத்தில் நாம தூபமே சிறந்த வழிபாடு

* இறைவனின் பிரபஞ்சத்தின் சக்தி உங்கள் மீது விழுகின்றது.

இன்றைய கால கட்டத்திற்கு உகந்த வழிபாடாக நாம ஜெபமே பரிந்துரைக்கப்படுகிறது. தினம் மற்ற வேலைகள் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு வசதியான நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேர நாம ஜெபம் செய்யலாம். காலை 6 மணி முதல் (அ) மாலை 6 மணி என ஆரம்பித்தால் தினமும் அதே நேரத்தில் ஜெபத்தினை ஆரம்பிப்பது நல்லது. ராம ஜெபம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அவரவர் குரு அருளிய (அ) வீட்டில் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த நாம, ஜெபத்தினை பயிற்சி செய்யலாம். இது ஒருவகை தியான முறையாகும். இதனை மந்த்ரா தியான முறை என்பர்.

விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும், ஜெபம், தியானம் போன்றவை.

* மன உளைச்சலை நீக்கி மனதினை அமைதி படுத்துகின்றது

* கவனிக்கும் திறன், கூர்மையை அதிகரிக்கின்றது.

* அழிவுப் பூர்வமான சிந்தனைகள் வெகுவாய் குறைகின்றன.

* ஆக்கப்பூர்வ சிந்தனைகள் அதிகரிக்கின்றன.

* உடலின் சக்தி கூடுகின்றது என்று வெளிநாட்டின் யோகா மையங்களின் ஆய்வுகள் கூறுகின்றன.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மகான் பகவான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சிறு வயதில் இருந்தே எப்போதும் ஜெபம் செய்த

வாரே இருப்பார். யாரேனும் அவரை அணுகி, என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்டால் 'கர்மா ஒழிய வேண்டும்' அதற்காக மந்திர ஜெபம் செய்கிறேன் என்று சொல்வாராம்.

கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நாலு வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்வதால் கர்மா ஓழிந்து விடுமா? என்ன என்று ஆச்சரியமாகக் கேட்பார்களாம்.

சேஷாத்திரி சுவாமிகள் அவை வெறும் வார்த்தைகள் அல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்தான். அது வெடி மருந்தாக மாறலயா. அது மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் மாறுதல் நிகழ்த்தும். மந்திரம் சொல்ல சொல்ல மனசு ஒருமைப்படும். மனம் சுத்தமாகும். ஒரு முகப்பட்ட மனசுக்கு சக்தி அதிகம். சுத்தமான மனசு எது கேட்டாலும் கிடைக்கும். சந்தேகம் இல்லாமல் செய்யணும் நமக்கு கிடைச்ச இந்த காலத்திலேயே செய்யணும்.

செய்வேன் என்ற வைராக்கியம் வேண்டும் பின் அதுவே ஒரு மணி நேரத்தினை கூட்டிக் கொண்டே போகும்.

இதனால் மனம் அமைதிப்படும். கோபம் குறையும் காதுக்குள் இனிமையான சங்கீதம் கேட்கும். நாக்கு ருசி தேடி அலையாது. முகம், உடலில் புதுப்பொலிவு ஏற்படும். பசிக்காது. தூக்கம் வராது.

பகவானின் அருகில் போய் விடலாம். நீயே ஜெபமாகி விடுவாய். மனதில் இருந்து பீறிட்டு ஜெபம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என சேஷாத்திரி சுவாமிகள் மந்திர ஜப தியானத்தினைப் பற்றி கூறியுள்ளார்.

மேலும் ஜபம், மூச்சு விடுதல் போல் தானாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த ஜப தியானமும் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்பதும் சில ஆய்வுகளின் கருத்தாகும்."

பலர் ஆன்மீகத்திலும் இல்லாது, உலக இயல்பான வாழ்க்கையோடு ஒட்டியும் இல்லாது எப்போதும் கதவை மூடிக் கெண்டு இருட்டறையில் அமர்ந்தபடியே இருப்பர். இது இவர்க

ளது மூளையின் செயல்பாட்டுத் திறனையே வெகுவாய் குறைத்து விடும்.

* மிகவும் 'ஸ்கிரீன் டைம்' என போன், கம்ப்யூட்டர் முன் இருப்பவர்களின் புத்தி கூர்மை குறையும்.

* எப்போதும் எதிர்மறையான செய்திகள் கேட்பது. ஏதாவது எண்ணங்களில் மூழ்கியது போன்று இருப்பவர்கள் சோகமாகவே மாறி விடுவர்.

* அதிக சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பின்றி மந்தமாகி விடுவர்.

ஆக மூளையை படிப்பு, வேலை, தியானம் என பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மூளை, மனதினைக் கொண்டு உங்கள் எதிராளியுடன் சண்டை போடுவதிலேயே செலவழிக்கக் கூடாது. இதில் அதிக எதிர்மறை பதிவுகள் ஏற்படும். மேலும் எதிராளி உங்கள் திறமைகளை கற்றுக் கொள்கின்றான்.

அதற்கு பதிலாக அமைதியாக இருந்து விடலாம்.

இந்த அமைதி நீங்கள் இந்த சண்டையை தவிர்த்து வெளியறியது ஆகாது.

உங்கள் நேரம், வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களிடம் வீணடிக்க விரும்பவில்லை என்பதாகும்.

அந்த நேரத்தில் தியானம் செய்யலாமே.

Tags:    

Similar News