சிறப்புக் கட்டுரைகள்
null

மூலநோய்க்கான சித்த மருத்துவ தீர்வு

Published On 2024-05-04 09:21 GMT   |   Update On 2024-05-04 09:23 GMT
  • மலத்துவாரத்திற்கு மேல் 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.
  • 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது.

வயிற்றின் அடியில் கவிழ்த்து வைத்தாற்போல் மேலே ஏறிய பின் கீழே இறங்கும் வடிவ பெருங்குடலின் முடிவு மலத்து வாரமாகும். மலத்துவாரத்திற்கு மேல் ஏறத்தாழ 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.

முதல் மடிப்பு மலத்தை வெளித்தள்ள சுருங்கி கீழ்வதாகும். இரண்டாவது மடிப்பு மலத்தை வெளித்தள்ளுவதாகும். மூன்றாவது மடிப்பு மலங்கழித்தவுடன் மூடிக்கொள்வது. இந்த 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது. மூலம் 21 வகைப்படும் என்று யூகி முனிவரால் அருளப்பட்ட வைத்திய சிந்தாமணி எண்ணாறு என்னும் நூல் கூறுகிறது. அவை வருமாறு:-

நீர்மூலம்:

வயிறு வலித்து சுருண்டு மேலும் கீழும் பொருமிக் கொள்ளும். வாயில் நீர் ஊறும். மலம் வறண்டு போகும். அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்ச்சி ஏற்படும்.

செண்டுமூலம்:

ஆசன வாயில் வலிக்கும். காரம் உட்கொண்ட வுடன் மலம் வெளிவரும். ரத்தமும் நீரும் கலந்து வெளிவரும். ஆசன வாயில் அரிப்பு ஏற்படும். சுருங்கும்.

தொந்தி மூலம்:

மலங்கட்டிக் கொண்டு இருக்கும். வயிறு பொருமல் ஏற்படும். நடக்க முடியாது. வியர்க்கும். தாகம் ஏற்படும். ஆசனவாய் அட்டைபோல் சுறுங்கும்.

வினைமூலம்:

பசி ஏற் படாது. உண்ட உணவு செரிக்காது. அடிவயிறு குத்தும். கை, கால் உளைச்சல் ஏற்படும். வயிறு இரைத்து சூடு ஏற்படும். மலங்கட்டும். நரம்புகளை இழுக்கும். ஆசன வாயில் கருப்பு அதிகரிக்கும். தினமும் எரிச்சல் உண்டாகும்.

மேக மூலம்:

உடம்பில் திமிர் ஏற்படும். சிறுநீர் எரியும். தலையும், காலும் வலிக்கும். திடீரென்று கழிச்சல் ஏற்படும். ரத்தம் பீறிடும்.

பவித்திர மூலம்:

கை, கால் கனக்கும். மலவாயில் கனல் ஏற்படும். ஆசன வாயில் கட்டி ஏற்படும். ஆசன வாயில் மாம்பூ போல முளைகள் ஏற்படும். பின் கோவை பழம் போல சிவப்பு நிறமாகும்.

கிரந்தி மூலம்:

ஆண்குறியில் புண் ஏற்படும். கை, கால்களில் கருப்பு ஏற்படும். ஆசன வாயில் புண்ணாகி கொடி கொடியாய் முளை உண்டாகி சீழும், ரத்தமும் வெளிப்படும். மலம் கட்டிக்கொண்டு கீற்று போல வெடித்து இறங்கும்.

குத மூலம்:

மூக்கில் குறுத்து போல வெளிப்பட்டு உள்ளே இழுத்துக்கொள்ளும். ரத்தமும், சீழும் வெளிப்படும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். கை, காலில் மதப்பு ஏற்படும். கோபம் ஏற்படும். புற மூலம்: எண்ணெய் போலும், நீர் போலும் மலவாயில் கசிந்து சீழ் கொட்டும். அரிப்பு ஏற்படும். உடம்பு முழுவதும் சிறு சிறு சிரங்குகள் ஏற்பட்டு சொறி ஏற்படும். பிணம் போல முக வாட்டம் ஏற்படும்.

சுருக்கு மூலம்:

வாயில் தடிப்பு ஏற்பட்டு ஆசன வாய் சுருங்கிக்கொள்ளும். பெருங்குடலில் வலி ஏற்படும். வயிறு பொருமும். நீரும், ரத்தமும் வெளியாகும். உடல் வெளுக்கும். உடம்பில் அசதி ஏற்பட்டு தளரும்.

சவ்வு மூலம்:

தொப்புளை சுற்றி தாமரை பூ போல தடிப்பு ஏற்படும். ஆசன வாயில் சவ்வு போல ஏற்படும். சீழும், நீரும் அடிக்கடி கசியும்.

மூளை மூலம்:

ஆசன வாயில் கடுக்கும். எரியும், மிக சுருங்கும். அரிப்பு காணும். அடிவயிறு கல் போலாகும். மலம் கழிக்கும்போது ரத்தம் பீறிடும்.

வரண மூலம்:

மலங்கட்டிக் கொண்டு துண்டாக வரும். அடிக்கடி கோபம் ஏற்படும். நாளடைவில் உடல் பலம் குறையும்.

ரத்த மூலம்:

தொப்புளில் வலி ஏற்படும். மலங்கழிக்கும் முன் ரத்தம் பீறிட்டு வெளிவரும். உடலில் வறட்சி ஏற்படும். நாளடைவில் மூட்டுகளில் வலி ஏற்படும். காய்ச்சல் ஏற்படும். மயக்கம் உண்டாகும். கண்களில் நிறமுண்டாகும்.

சீழ் மூலம்:

மலவாய் கடுத்து எரிவு ஏற்படும். மலவாய் தளர்ந்து போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளிப்படும்.

ஆழி மூலம்:

வள்ளி கிழங்கு போல முளை காணும். சீழும் ரத்தமும் ஏற்படும். காரம் உண்ண முடியாது. உடல் பலம் குறையும்.

தாமர மூலம்:

ஆசன வாயை சுற்றி புண் ஏற்படும். வயிறு கொள்ளும் பசி இருக்காது. மூச்சுத் திணறல் ஏற்படும்.

விதமூலம்:

கோவைப்பழம் போல் முளை தள்ளி இருக்கும். நாளடைவில் கறுப்பாக மாறும். மிருதுவதுவாகும். கடுப்பு அரிப்பு குத்தல் வலி ஏற்படும். மலவாயின் உள்ளும் வெளியும் வலி ஏற்படும்.

பித்தமூலம்:

அடிக்கடி தலைவலி ஏற்படும். பருத்திக் கொட்டை போலும் நெல் போலும் முளை உண்டாகும். மாவு உருண்டைப் போல் ரத்தமும், சீழும் கலந்து மலம் வெளியாகும். அடிக்கடி தாகம் ஏற்படும். வியர்க்கும்.வயிறு வலிக்கும்.

சிலேட்டுமா மூலம்:

எண்ணை நிறமுளை ஏற்படும். எப்பொழுதும் எரிவு இருக்கும். கருப்பு ஏற்பட்டு நீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறுநீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறு நீர் சுடும். விந்து நஷ்டம் ஏற்படும் . உடல் வெளுக்கும் வாய் சுவையற்றுப் போகும்.

 இதற்கு எளிய சித்த வைத்திய முறைகள் உள்ளன. பிரண்டையை உலர்த்தி சூரணித்து அதற்கு நிகராக சர்க்கரை கலந்து சிறிது பசு நெய்யில் குழைத்து 40 நாட்கள் உண்ண தீரும்.

சதுரக்கள்ளியை நறுக்கி பானையில் போட்டு 4 படி தண்ணீர் விட்டு வேடு கட்டி, அதன்மேல் 1/2 கப் கருங்குறுவை மாவை வைத்து பிட்டவித்து 3 நாட்கள் மூன்று வேளை கொடுக்க மூலம் தீரும்.

கொட்டைப்பாசி 50 கிராம், கடுக்காய் 50 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி வடிகட்டிக் கொள்ளவும். 5 கிராம் மிளகு தூளை மேஜைக் கரண்டி அளவு தேனில் குழைத்து காலை மாலை இரண்டு வேளையாக 5 நாட்கள் உண்டு வர சகல மூல நோய்கள் குணமாகும்.

நாயுருவி இலை 50 கிராம், கறிவேப்பிலை 50 கிராம், கருணைக் கிழங்கு 150 கிராம், பசுவெண்ணெய் 250 கிராம் இவற்றை லேகியம் போலக் கிண்டி ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு வீதம் 5 நாட்கள் உண்டு வர நோய் குணமாகும். 1 நாளைக்கு 1 வேளை சாப்பிடவும்.

காட்டு கருணை, காராக் கருணை, பிரண்டை, கொடி வேலி, அறுகு, புளியமடல், மகுளி ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை இரு வேளைகளிலும் 5 கிராம் தூளை 1 மேஜைக் கரண்டி தேனில் குழைத்து அருந்தலாம்.

கைக்குத்தல் கருங்குருவை அரிசியை 200 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் முப்பிரண்டை சாற்றையும் 100 மிலி கடல் நீரையும் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து அரிசியை மட்டும் எடுத்து அரைத்து அடை போல தட்டி இரும்பு தோசைக் கல்லில் போட்டு 50 கிராம் பசு நெய் விட்டு வேக வைத்து காலை உணவாக 6 நாட்கள் தொடர்ந்து உண்டு வர வெளி மூலம் குணமாகும்.

50 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பசும் பாலில் வேக வைத்து 50 கிராம் தேனில் உட்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து மருந்தை ஒரு வாரம் சாப்பிடவும், உரித்த வெள்ளைப்பூண்டை நெய்யில் வதக்கி பின் தேனிட்டு அரைத்து காலை மாலை இருவேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்.

புளிக்கருணைக் கிழங்கு தோல் நீக்கி 100 கிராம் எடுத்து சில துண்டு துளாக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கிழங்கைப் போட்டு 5  கிராம் மிளகு தூளைப் போடவும். பின் 200 மி.லி. நெய் விட்டு வறுத்து எடுத்து மரக்கறியுடன் சேர்த்து சாப்பிட குத்துமூலம் குணமாகும்.

விளாமிச்சை வேரை சிறிது வாழைப் பூவின் சாறு விட்டு அரைத்து வாழைப் பூவின் சற்றில் கலந்து உணவுக்கு முன் அருந்து ரத்தக்கடுப்பு நீங்கும்.

சித்த மருத்துவர்

கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

9994932121

Tags:    

Similar News