சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!
- சன்னியாசம், வைராக்கியம் போன்றவற்றில் உண்மையாக ஈடுபடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
- தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெற கன்னிப்பெண்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவர்.
பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் சக்கரத்தாழ்வார் சன்னதியினை வணங்காமல் வர மாட்டார்கள். இங்கு அதிக கூட்டம் இருக்கும். 3 சுற்று, 12 சுற்று, 48 சுற்று என வலம் வந்து வழிபடுவார்கள். இப்படி சுற்றி வருவது வேண்டுதல்களை நிறைவேற்றும் என்பது ஐதீகம். நம்பிக்கை. அதுவும் புதன், சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். துளசி, சிகப்பு பூக்கள் சாற்றி அர்ச்சனை செய்வர். நெய் விளக்கு போடுவர்.
சுதர்சனர் எனப்படும் இவர் மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் என்று குறிப்பிடப்படுபவர். இவரை வணங்கினால் ஒருவருக்கு வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் விலகுகின்றது என்பது நம்பிக்கை. ஸ்ரீ வராக அவதாரத்தில் இவர் வராகரின் மூக்குப் பகுதி. நரசிம்ம அவதாரத்தில் இவர் நரசிம்மரின் நகங்கள். ராம அவதாரத்தில் ராமரது வில், கிருஷ்ண அவதாரத்தில் சக்கரம், பெருமாளை எப்போதும் சங்கு, சக்கரத்துடன் பார்க்க முடியும்.
இவர் 16 கைகள் கொண்டவராகவும், 32 கைகள் கொண்டவராகவும் காணப்படுகின்றார். 'ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்று எண்ணிக்கை கணக்கிலோ, எப்போதுமோ கூறலாம்.
'சக்ரா' என்றாலே எப்போதும் சக்தியுடன் இயங்குவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
மகாவிஷ்ணுவின் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று இவரை வழிபடுகின்றோம்.
மனிதனுக்கு கஷ்டங்கள் கொஞ்சமாகவா இருக்கின்றது. நோய், கடன், சத்ருக்கள் என கொட்டி வழிகின்றன. இதில் மனதினை ஒரு நிலைப்படுத்து, ஆன்மீக பயணம் மேற்கொள் என்றால் முடியுமா?
எந்தவித பிரச்சனையானாலும் பில்லி, சூன்யம், பயம், பிரமை, வம்பு, வழக்கு, குடும்ப பிரச்சனை. இப்படி எந்தவித பிரச்சனையானாலும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால் நீங்கும். நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
வெளியில் உள்ள பகைகளையும் நம் உள்ளே உள்ள பகைகளையும் நீக்குபவர் சக்கரத்தாழ்வார் என்பதால் ஆன்மீக பாதையில் முன்னேற இவரது வழிபாடும் அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மூலம்
* பாராட்டுகளை எதிர்பாராத மன உறுதி தீரும்.
* திறமை, கவனம் அதிகரிக்கும்.
* வேண்டாத இடங்களில் இருந்து நம்மை இழுத்து வந்து விடும்.
ஒருவரின் ஆன்ம பலத்தினை அவரே உணரச் செய்யும்.
இவை அனைத்தும் எந்த இறைவழிபாட்டின் மூலமும் கிடைக்கும் பயன்கள்தான் என்பதனை உணர்வோம்.
ஆன்மா, ஆன்மா என்கின்றோம். இந்த ஆன்மா ஒரு தாயின் கருவில் சேர்ந்து அந்த உடலோடு உலகிற்கு வரும்போது அது பிறப்பு என்று கூறப்படுகின்றது.
அதே ஆன்மா அந்த உடலை விட்டு எந்த காலத்தில் பிரிந்தாலும் அந்த உடலுக்கு இறப்பு ஏற்படுகின்றது.
அதே ஆன்மா மற்றொரு உடலில் சேரும்போது அது மறுபிறப்பு.
எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு-விபத்து, தற்கொலை மூலம் ஏற்படும் இறப்பினை அகால மரணம் என்கின்றோம்.
ஆன்மா உடலில் இருந்தாலும் அந்த மனிதன் உலக வாழ்வினைத் துறந்து சென்றால் அது துறவரம், சன்னியாசி.
ஆன்மாவும், உடலும் ஒருங்கே இருந்தாலும் எதிலும் அதிக கட்டுப்பாடுடன், அளவு மீறாமல் வாழ்பவன் வைராக்கியம் கொண்டவன்.
ஆன்மா உடலை விட்டு பிரியும் காலத்தினை அறிந்து மகிழ்வோடு எளிதாக அந்த குறிப்பிட்ட நேரத்தில் உடலை விட்டு பிரிபவர்கள் அடைவது முக்தி.
ஆன்மா, உடல், உள்ளடக்கிய மூச்சு காற்றோடு காலம், காலமாய் இருப்பவர்களை ஜீவ சமாதி அடைந்தவர் என்கின்றோம்.
நாம் வாழும் இந்த கலியுகத்தில் நம் கண்ணுக்கு அதிகமாகத் தெரிபவை பிறப்பு, இறப்பு, அகால மரணம், தற்கொலை இவைகள்தான்.
ஜீவ சமாதி போன்றவை நம் கண்ணுக்கு தெரியாமல் எங்கோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சன்னியாசம், வைராக்கியம் போன்றவற்றில் உண்மையாக ஈடுபடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
நாம் அனைவரும் தீய எண்ணங்கள் இல்லாத நல்ல மனமுடையவர்களாவது வாழ முயற்சிப்போமே.
* சக்கரத்தாழ்வாரை சித்திரை நட்சத்திரத்தில் வழிபடுவது சிறப்பு.
* சாளக்கிராமங்களில் சுதர்சன சாளக்கிராமத்தினை வைத்து பூஜை செய்பவர்கள் உண்டு.
* ஸ்ரீ நாராயணனின் மறு சக்தியாகவே சுதர்சனர் பார்க்கப்படுகின்றார்.
* சக்கரத்தாழ்வாரின் மறுபுறம் உள்ள யோக நரசிம்மரையும் சேர்த்து வழிபட ணே்டும்.
* திருமோகூர், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், மதுரை அழகர் கோவில், ஸ்ரீரங்கம், கும்பகோணம் திருசக்ரபாணி கோவில் இவை சக்கரத்தாழ்வாரின் சிறப்பு தலங்கள்.
* ராமாயணத்தில் பரதனை ஸ்ரீசக்ரத்தாழ்வாரின் அம்சம் என்பர்.
* தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெற கன்னிப்பெண்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபடுவர்.
'சொல்வது'- அதாவது உபதேசம் செய்வது அனைவருக்கும் எளிது. மவுனமாய் இருந்தே தன் வாழ்வின் மூலம் பல பாடங்களைச் சொல்லித் தந்தவர்கள் மகான்கள் என்ற கூற்று உண்மைதான்.
அனைவரும் மகான்கள் ஆவது எளிதல்லதான். அனைவராலும் நல்ல கருத்துக்களை உபதேசம் செய்ய முடியாது என்பதும் கூட உண்மைதான்.
ஒரு செடி அந்த விதையின் ஊட்டம், மண்ணின் வளம், நல்ல நீர் வளம், பூச்சி பாதிப்பு இல்லாமை இவற்றினைக் கொண்டே வளரும். காய், கறி இவற்றினைத் தரும். அது போலத்தான் மனிதனும். தன் பரம்பரை, வளர்ப்பு முறை, சூழ்நிலை இவற்றினைப் பொறுத்தே வாழ்வினை வடிவமைத்துக் கொள்கின்றான். வினைப் பலனை நம்புபவர்கள் அதனையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் புத்தகங்களும், பல தலைவர்களின் பேச்சும், ரேடியோவும் தான் மனிதனுக்கு துணை புரிந்தது. கூட்டு குடும்பம் மிகவும் துணை புரிந்தது.
இன்று வாய்ப்புகள் கூடி விட்டன. கூடவே குடும்பங்களும் சுருங்கி விட்டது. இருப்பினும் வாய்ப்புகளை கை விட்டு விட வேண்டாம்.
கமலி ஸ்ரீபால்
* வருடத்திற்கு சில நல்ல புத்தகங்கள் என சிறு வயதில் இருந்தே படிக்க வேண்டும்.
* அன்றாட செய்திகளை ஒரு முறையேனும் கேட்க வேண்டும். தேவையற்ற வாதங்களுக்கு ஒதுங்கி இருப்போம்.
* ஆன்மீகமும் அறிய வேண்டும். நாத்திகமும் அறிய வேண்டும். இரண்டிலுமே அநேக நல்ல கருத்துகள் உள்ளன.
* தியானம் தினமும் 10 அல்லது 2 நிமிடம் (அமைதியாய் உடல் அசைவற்று எண்ண ஓட்டமற்று) இருந்தால் போதும். மிகச் சிறந்த தெளிவு இருக்கும்.
* நாம் சரியாக இருந்தால், சரியான செயல்களைப் புரிந்தால் அதனை மணிக்கணக்காய் பேசி பிறருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. செய்ய வேண்டியதும் இல்லை. அதே போன்று ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் அதனை வாதாடி 'நான்தான் சரி' என்று வாதாட வேண்டாம். அது மற்றவர்க்கும், நமக்கும் நிம்மதியினைத் தராது.
* பிறரோடு நம்மை சதா ஒப்பிட்டுப் பார்த்தால் நம் நிம்மதியே போய் விடும்.
* தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவது, தன்னைத்தானே மட்டமாக பேசுவது என்பது தன்னடக்கம் இல்லை. பலவீனம் ஆகும்.
* ஒருவர் தன் பிரச்சனைகள், போராட்டங்களை நினைத்து சுருங்கக் கூடாது. அன்றாடம் அந்த பிரச்சனை, போராட்டத்திற்காக குறிப்பிட்ட நேரத்தினை செலவிடுங்கள். பின்னர் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். இப்படி செய்யும்போது காலப்போக்கில் அவை குறைந்து விடும். மறைந்து விடும். மனமும் நொந்து ஓடியாமல் இருக்கும்.
* நாம் நம் பலத்தினை, உறுதியினை குறைவாக மதிப்பிடுகின்றோம்.
* மவுனம் தரும் நன்மைக்கு அளவே இல்லை. கோபம் வரும் நேரத்தில் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விட வேண்டும். வாயினை பசை போட்டு ஒட்டி விட வேண்டும்.
* மவுனம் என்பதனை வாய் மட்டுமல்ல, மனமும் பேசாது இருப்பதுதான் என்பர். குறைந்தபட்சம் பிரச்சனையான நேரங்களில் வாயையாவது திறக்காமல், வார்த்தைகளை கொட்டாமல் இருக்கலாமே.
* ரொம்ப பிரச்சனை கொடுக்கும் மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவதும் ஞானம்தான்.
* எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருந்தாலே நிம்மதி போய் விடும்.
* தவறு செய்யாத மனிதர்கள் குறைவுதான். தவறி விழுந்து மீண்டு வந்து விடுவோமே! அதுதான் சாதாரண மனித வாழ்வின் யதார்த்தம்.
* நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது குறிப்பாக காலையில் எழுந்தவுடன் இந்த உலகம் இங்குள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்டலாமே.