சிறப்புக் கட்டுரைகள்

பயத்தை விட்டு நம்பிக்கையை விதையுங்கள்!

Published On 2024-06-04 10:41 IST   |   Update On 2024-06-04 10:41:00 IST
  • ‘என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்’ என்ற நம்பிக்கையினை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளலாம்.
  • பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

கடுமையான நேரத்தினை தாண்டுவது என்பது அனைவருக்கும் ஒரு சவால்தான். ஒவ்வெரு நொடியும் ஒரு யுகமாய் தெரியும். விடாமுயற்சி, ஆக்க பூர்வமான எண்ணங்கள் இவையே கதி என இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அவை:

* அனைத்து மகிழ்வற்ற சூழ்நிலைகளும் நிச்சயமாக மாறும்.

* மன எண்ண ஓட்டங்கள், தவிப்பினை நீக்க சூழ்நிலையினை மாற்றுங்கள். நண்பர்களோடு வெளியில் செல்லுங்கள்.

* அழகிய இயற்கை சூழலில் இருக்கலாம். நகைச்சுவை சினிமா பார்க்கலாம்.

* ஏற்கனவே நீங்கள் தீயதினை வென்று விட்டீர்கள். நடப்பது ஒரு சிறு அனுபவம் அவ்வளவே.

* பிறரது தவறான எண்ணங்கள், பேச்சுகள் இவற்றிற்கு நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும். அதனை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். அவர்களே அதனை வைத்து கவலைபடட்டும்.

* நமக்கு மகிழ்ச்சி தேவை. நகைச்சுவை தேவை.

* நம் மீது நாம் அன்பாக, கருணையாக இருக்க வேண்டும்.

* எந்த சூழ்நிலையிலும் நாம் நன்றி சொல்ல ஏதோ ஒன்றினை பிரபஞ்சம் நமக்கு அளித்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு நாளில் எந்நேரமும் மனதினில் ஏதோ ஒன்றினைப் பற்றி யோசிப்பதும் குழம்புவதுமாக இருப்பவரா நீங்கள்?

* முதலில் உங்களுடன் நீங்கள் பேசும் முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்.

* அதிகமாக உங்களுக்கு நீங்களே அழிவுப்பூர்வமான சிந்தனைகளை கொடுக்காதீர்கள்.

* என்னால் முடியாது, என்றால் படிக்க முடியாது, திறமையாக பேச முடியாது என உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மூளை அதனையே நிஜம் என பதிவாக்கி அதன்படியே செயல்படத் தொடங்கி விடும்.

* கடந்த கால கசப்பான நினைவுகளில் மூழ்கி வெளிவராது உள்ளுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி தவிப்பவர்கள் ஏராளம். நிகழ்காலம் என்ற உணர்வே இல்லாது போய்விடும்.

* கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத்தரலாம். அந்த பாடங்கள் இனி நாம் தவறு செய்யாத நிலையினை உருவாக்கலாம்.

* ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பது எளிதானது. சிறந்த பலனை அளிக்கவல்லது.

* விடாமல் சில எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லையா? உங்கள் எண்ணங்களை பொறுமையாய், முழுமையாய் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து எறிந்து விடுங்கள்.

* அதிகம் யோசிப்பதற்கு பயம் ஒரு காரணம் என்பர். இப்படி நடந்து விடுமோ? அப்படி நடந்து விடுமோ? என்ற பயம் மனிதனை அரித்து விடுகின்றது. இதில் இருந்து விடுபடுவது எப்படி? பயத்தில் இருந்து விடுபட வேண்டும். சிலருக்கு பல்லி, கரப்பான் பூச்சி கூட பயம்தான். அதற்கு தீர்வாக வீட்டில் இவை இல்லாமல் செய்து விடுவதுதான். இது ஒரு சிறிய உதாரணம்தான். இதைப் போலத்தான் சிறிதோ, பெரிதோ பயத்தில் இருந்து வெளிவர முயற்சிகள் செய்து தீர்வு காண வேண்டும்.

ஒன்றினை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகம் யோசித்துக்கொண்டு இருப்பவர்கள் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர். ஆகவே தீர்வுகளைப் பற்றி அளவாக, அமைதியாக யோசிக்கலாம். எழுதலாம்.

'என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்' என்ற நம்பிக்கையினை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். இரவு தூங்காமல் இருந்து மறுநாள் இப்படி இருப்பது ஒரு சாதாரண நிகழ்வு எனலாம். ஆனால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகின்றது.

* சிலருக்கு எப்போதுமே சோர்வாக இருக்கக்கூடும். இது பெண்களுக்கு சற்று கூடுதலாக இருக்கக்கூடும்.

* கவனம் செலுத்த முடியாமை

* தலை சுற்றுதல்

* உடம்பு வலி

* மூட்டு வலி

* தலைவலி

* தொண்டை கட்டு போன்ற காரணங்களால் அதிக சோர்வு, தூக்கம் ஏற்படலாம்.

தைராய்டு குறைபாடு:

* தசைகள் வலுவின்மை * சோர்வு * ஜில்லென இருப்பது * மூட்டுகள், தசைகளில் வலி * இருதய துடிப்பு சற்று வேகம் குறைந்து இருப்பது * வியர்வை குறைவு * மலச்சிக்கல் *மனச்சோர்வு * வறண்ட சருமம் * முகம் உப்பி இருத்தல் * கரகரப்பான குரல் * மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு போன்ற காரணங்கள் தைராய்டு குறைபாட்டில் இருக்கும். இதன் காரணமாகவும் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.

 

ரத்த சோகை: உடலில் சுறுசுறுப்பின்றி இருப்பர். சக்தி இல்லாமல் எப்போதும் படுத்துக் கொண்டே இருப்பார்கள். வெளி நிற சருமம், முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும்.

தசை நார்வலி: உடல் முழுவதும் வலி என்பர். சோர்வு, இரவில் தூக்கமின்மை இருக்கும். இதனால் மனச் சோர்வு, படபடப்பு, தலைவலி, உடல் இறுக்கம் என இருக்கும்.

அலர்ஜி: இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். கண்களில் அரிப்பு இருக்கலாம்.

ப்ளூ போன்ற வைரஸ் பாதிப்புகள்: இத்தகு பாதிப்பு நேரங்களில் அதிக தூக்கம் தேவைப்படும்.

* ஆர்த்ரைட்டிஸ், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்களின் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

* உணவில் சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உடலில் நீர் சத்து குறைவாக இருப்பது:

அதிக தாகம், சிறுநீர் அளவு குறைதல், அடர்ந்த சிறுநீர், வறண்ட சருமம், தலை சுற்றல் இவை அறிகுறிகளாகத் தெரியும். உடலில் நீர் சத்து குறைவது என்பது சற்று ஆபத்தானதே.

 

கமலி ஸ்ரீபால்

மன அழுத்தம்: போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு வாங்கும். வயிறு பிரச்சனை, பசியின்மை இருக்கும். ஊட்டச் சத்து சரிவர உறிஞ்ச படாது இருக்கலாம். படபடப்பு ஏற்படும்.

* மனச் சோர்வு, கவலை இவையும் இத்தகு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

* மாத விடாய் காலங்களில் வயிற்று பிரட்டல், தலைவலி, முதுகு வலி, எரிச்சல் காரணமாக படுத்துக்கொண்டே இருப்பர்.

* கர்ப்ப காலத்தில் ரத்த சோகை, ஹார்மோன் மாறுபாடுகள் இதே பிரச்சனையைத் தரும்.

சரி இதையெல்லாம் திடீரென இப்போது எழுத என்ன காரணம்? கோடை காலம் அல்லவா!

அதிக வெப்பம் நம்மை பல விதங்களில் வாட்டும். ஆனால் பல உடல்நல பிரச்சனைகளை நாம் கோடை பிரச்சனை என்று எண்ணி கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கோடைக்கான கவனமும் தேவை. * அன்றாடம் இருமுறை குளியுங்கள்.

* 2 லிட்டர் நீர் அருந்துங்கள்.

* காபி, டீ இவற்றினை காலை ஒரு வேளையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

* பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

* நீர் மோர் நிறைய குடியுங்கள்.

* காரம், புளி இவற்றினை வெகுவாய் குறைத்து விடுங்கள்.

* கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்வதனை தவிர்த்து விடுங்கள்.

* வெயிலோ, மழையோ கண்டிப்பாய் பத்து நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

 சியா விதையை உணவில் சேருங்கள்

ஏன் இன்னமும் அனைவரும் சியா விதையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை? இதனைப் பற்றி எழுதாத உணவு கட்டுரைகளே இல்லை.

2 டீஸ்பூன் சியா விதையில் பசலைக்கீரையை விட 3 மடங்கு அதிகமான இரும்பு சத்து இருக்கிறது. பாலை விட சுமார் 6 மடங்கு அதிகமான கால்சியம் சத்து உள்ளது.

புரத சத்து சுமர் 25 சதவீதம் கொண்டது. அன்றாட தேவைக்கான நார் சத்து 40 சதவீதம் கொண்டது. சாலமன் மீனை விட 95 சதவீதம் ஒமேகா 3 கொண்டது. 30 சதவீதம் அன்றாட தேவைக்கான மக்னீசியம் கொண்டது. இத்தனை சத்துக்கள் கொண்ட இதனை நாள் ஒன்றுக்கு 2 டீஸ்பூன் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனை ஜீஸ், சாலட் இப்படி எதிலும் கலந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். வயிற்று வலி, உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு என்ற பாதிப்புகள் ஏற்படும். எதிலும் அளவுடன் இருப்பது நன்மை பயக்கும்.

Tags:    

Similar News