சிறப்புக் கட்டுரைகள்

முக அழகை காக்கும் நவீன லேசர் சிகிச்சை

Published On 2024-03-01 15:39 IST   |   Update On 2024-03-01 15:39:00 IST
  • நாம் அனைவருமே பொலிவான, தழும்புகள் இல்லாத, பிரகாசமான முகத்தோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுகிறோம்.
  • பிக்கோ லேசர் சிகிச்சை முறையானது விரைவான ஒரு சிகிச்சை முறையாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதில் சரும ஆரோக்கியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

எல்லாருடைய எண்ணமும் வயதாக கூடாது என்று தான் இருக்கும். அதிலும் பெண்கள் தங்கள் சரும ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயதாகுவது என்பது ஒரு இயற்கையான செயலாகும்.

இதை நம்மால் மாற்றவோ, நிரந்தரமாக நிறுத்தவோ முடியாது. நாமும் நம் சருமம் வயதாகுவதை தடுக்க எவ்வளவோ முயற்சிகளை செய்வது உண்டு. மேற்பூச்சு கிரீம்கள், காஸ்ட்லி மேக் அப் பொருட்கள் கொண்டு, தங்களை அழகுபடுத்திக் கொள்வது உண்டு.

அப்படி பயன்படுத்தும் பொருட்களால் சரும பிரச்சனை ஏற்பட்டு நம் அழகையும், சருமத்தையும் பாதிக்கிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக ஒருவருக்கு அரிப்பு ரேஷஸ் உள்ளிட்ட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே சருமத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை பெறுவது அவசியமாகிறது.

சரும பிரச்சனைக்கு என்று பல வகையான சிகிச்சைகள் உள்ளது. அதன் மூலம் சருமத்தில் இருந்து மீண்டும் இழந்த அழகினை பெற்றுக் கொள்ளலாம். இன்றைய காலக்கட்டத்தில், சரும பராமரிப்பு மற்றும் அழகுக்கலை சார்ந்த சிகிச்சை முறைகளில் நவீன தொழில் நுட்பங்கள் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன.

சருமத்தை மாசற்ற முறையில் பராமரிப்பு மற்றும் சருமப் புனரமைப்பு சிகிச்சைகளில் அவை சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி சிகிச்சை என்பது மிகவும் புதுமையான அறிமுகம்.

தற்போது கிடைக்கும் லேசர் தொழில்நுட்பங்களில் மிகவும் நவீனமானது இந்த பிக்கோசெகண்ட் லேசர் சிகிச்சை தான். இந்த சிகிச்சையானது மிகவும் பாதுகாப்பான லேசர் சிகிச்சை ஆகும். முக அழகுக்கும், உடல் முழுக்கவும் பயன்படுத்த ஏற்றது. மிக விரைவிலேயே கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நிரந்தரமான தீர்வையும் வழங்குகிறது.

பிக்கோசெகண்ட் லேசர் டெக்னாலஜி என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது. நம் முக அழகு மற்றும் சருமத்தின் பொலிவைக் காக்க அது எப்படி உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் அனைவருமே பொலிவான, தழும்புகள் இல்லாத, பிரகாசமான முகத்தோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுகிறோம். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு எப்போதும் தோன்றுவது ஒன்றே ஒன்று தான். அது என்னவென்றால் நமக்கு எவ்வளவு வயது ஆனாலும் நம்முடைய முகத்தில் முகச்சுருக்கங்கள் வந்து விடக்கூடாது என்பது தான்.

முகச் சுருக்கம் வராமல் நாம் எப்போதும் இளமையான தோற்றத்துடனேயே இருக்க விரும்புவோம். அப்படி நாம் எப்போதும் முக சுருக்கம் வராமல் இளமையுடன் இருப்பதற்கு நவீனத் தோல் சிகிச்சை முறையான பிக்கோலேசர் தொழில்நுட்ப சிகிச்சை பெரிதும் உதவி வருகிறது. இந்த சிகிச்சையானது இளமை தோற்றத்தை வெளிப்படுத்தும்.

முகப் பருக்களால் ஏற்படும் தழும்புகள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், மங்கு, கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், தோல் சுருக்கம் மற்றும் வயதாவதால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை நமது தன்னம்பிக்கையை மிகவும் பாதிக்கின்றன.

அப்படி நமது தன்னம்பிக்கையை பாதிக்காமல் இருப்பதற்கும், இவை அனைத்தையும் சரி செய்வதற்கும் இந்த நவீனத் தொழில்நுட்ப சிகிச்சையான பிக்கோ லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய கால கட்டத்தில் டாட்டூ கலாச்சாரம் அதிகமாக உள்ளது. முதலில் ஆசைப்பட்டு டாட்டூ போட்டாலும், எப்போதாவது அதனை அழித்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும். அப்போது அழிக்க முடியவில்லையே என கஷ்டப்பட வேண்டாம். நாம் டாட்டூ என்ற பச்சை குத்திய அடையாளங்களை அழிக்கவும் இந்த பிக்கோ லேசர் சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

பிக்கோ லேசர் சிகிச்சை முறையானது விரைவான ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட. இந்த சிகிச்சையானது அறுவை சிகிச்சை செயல்முறையோ அல்லது நமது சருமத்தை துளைத்தோ செய்யப்படும் சிகிச்சையோ கிடையாது.

 

உடலுக்குள் ஊடுருவாமல், வெளியில் இருந்தவாறே செய்யப்படும் சிகிச்சை தான் பிக்கோ லேசர் சிகிச்சை. இந்த சிகிச்சையை ஏராளமானோர் செய்துள்ளனர். இந்த சிகிச்சை பலருக்கும் சிறப்பான பயன்களை அளித்துள்ளது. அதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்களும் ஏராளமாக உள்ளன.

சருமம் மற்றும் அழகுக்கலையில் சிறந்த சிகிச்சை முறையாக உள்ள இந்த பிக்கோ லேசர் சிகிச்கையானது பல்வேறு சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. முகத்தில் தழும்பு, விபத்தில் ஏற்படும் காயத் தழும்புகள், முகத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள், சுருக்கம் ஆகியவற்றை நீக்கும் எளிமையான சிகிச்சையாகவும் இந்த சிகிச்சை முறையானது உள்ளது.

இந்த சிகிச்சையில் சருமத்தின் குறிப்பிட்ட பகுதியில் அல்ட்ரா லேசர் கதிர் செலுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தோல் பகுதியானது சரி செய்யப்படுகிறது.

தோலில் செலுத்தப்படும் லேசர் கதிர்கள் முதலில் பாதிப்புக்குரிய தோல் பகுதியை மிக சிறியதாக உடைக்கிறது. அதனை தொடர்ந்து, தோலின் இயற்கையான செயல்பாடுகள் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதி முற்றிலும் வெளியேற்றப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பிறகு தீக்காயங்கள் ஏற்பட்டது போல இருக்காது.

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள், பிக்கோ லேசர் சிகிச்சையில் லேசர் கதிர்களால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் சரி செய்யப்படுகிறது. டாட்டூ எனப்படும் பச்சை குத்துவதற்கு பல்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த லேசர் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட சில நிறங்களை மட்டுமே அகற்ற முடியும். ஆனால் பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சையில் அனைத்து நிறங்களிலும் போடப்பட்ட பச்சை குத்திய தழும்புகளையும் அகற்றி விடலாம். லேசர் கதிர்கள் டாட்டூக்களில் பட்டு, மிக சிறியதாக அந்தத் தழும்புகளை உடைத்து வெளியேற்றி விடும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே சிகிச்சையில் தழும்புகளை சரி செய்ய முடியாது. அதிகபட்சம் 5 முதல் 6 கட்டங்களாக இந்த சிகிச்சையை மேற்கொண்டால் படிப்படியாக தழும்புகள் அழிக்கப்பட்டு விடும். டாட்டூக்களின் அளவைப் பொறுத்தும் சிகிச்சை பல்வேறு கட்டங்களாக திட்டமிடப்படும். மச்சம் போன்றவற்றை அகற்றுவதற்கும் இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில் நுட்பத்தில் குறிப்பிட்ட தோல் பகுதிகளில் துல்லியமாக லேசர் கதிர்கள் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தோலின் பிற பகுதிகளில் பாதிப்போ, தீக்காயங்களோ, நிறமாற்றமோ எதுவுமே இருக்காது.

 

டாக்டர். பவித்ரா, கே.எம்.சி.எச். மருத்துவமனை, கோவை

இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக நாம் மருத்துவமனையில் தங்கி கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு மணி நேரத்தில் முடிக்கக்கூடிய எளிமையான சிகிச்சை முறையே பிக்கோ லேசர் சிகிச்சை.

சிகிச்சை பெற்ற பின்னர் நாம் இதற்காக ஓய்வெடுக்கவோ, பிற பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றவோ தேவையில்லை. நாம் எப்போதும் போல இருக்கலாம். அதிகபட்சமாக சன்ஸ்கிரீன் கிரீம் மட்டும் போட்டாலே போதும்.

இது ஒரு அறுவை சிகிச்சை முறை இல்லை என்பதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இருக்காது. இந்த சிகிச்சைக்கு முன்பும், சிகிச்சைக்கு பின்பும் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதையும் டாக்டர்கள் தெளிவாக விவரித்து விடுவார்கள். அதனை பின்பற்றினாலே போதுமானது.

பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சைக்கு பிறகு சருமத்தில் கொலாஜன்கள் உற்பத்தியாவது இயல்பாக தூண்டப்படுகிறது. இதன் மூலம் சருமம் இளமைத் தோற்றத்துடன் மென்மையாக காணப்படும். நமது உடலில் எங்கும் சுருக்கங்களும் இருக்காது. இந்த நவீன பிக்கோ லேசர் தொழில்நுட்ப சிகிச்சையானது கொங்கு மண்டலமான கோவையில் கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்தி ரியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புக்கு:

0422-4323104

Tags:    

Similar News