சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள்: மீனா உன் கண்ணுக்குள்ள மின்னலென்ன...?

Published On 2024-04-29 10:58 GMT   |   Update On 2024-04-29 10:58 GMT
  • வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள்.
  • ளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம்.

எதிர்பாராத இடத்தில்...

எதிர்பாராத நேரத்தில்...

எதிர்பாராத நண்பர்களை சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்...?

அந்த சந்திப்பையும், அனுபவத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு அனுபவத்தை நானும் சந்தித்தேன் கோவாவில்.

விஜயகாந்த் சாருக்கு ஜோடியாக உளவுத்துறை படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தில் பெரும்பகுதி ஷூட்டிங் சென்னையில் தான் நடந்தது.

அந்த படத்தில் ஒரு வெகுளிப் பெண் பாத்திரத்தில் நடித்தேன். படிக்காத பெண்ணான நான் விஜயகாந்த் சாரை திருமணம் செய்திருப்பேன். கடற்படை உளவுத்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் கடல், படகு சார்ந்த காட்சிகள் நிறையவே உண்டு.

கோவாவில் படப்பிடிப்பு. படக்குழுவினர் எல்லோரும் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தோம்.


ஒரு நாள் அந்த ஓட்டல் அறையில் இருந்து வெளியே வந்தேன். சற்று தூரத்தில் எனது நெருங்கிய தோழியான நடிகை மகேஸ்வரியை பார்த்ததும் ஆச்ச ரியத்தில் அப்படியே நின்று விட்டேன். ஒரு வரை ஒருவர் பார்த்தும் இருவருக்குமே இன்ப அதிர்ச்சி. சினிமா காட்சிகளில் வருவது போல் தான் அப்போது நாங்களும் நடந்து கொண்டோம்.

அவள் என்னை பார்த்து ஓடிவர... நான் அவளை பார்த்து ஓட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொண்டோம்.

'ஏய்... நீ எப்படி இங்கே?' என்று நான் கேள்வி எழுப்பவும், அவளும் அதே கேள்வியை என்னை பார்த்து கேட்கவும் நான் உளவுத்துறை படத்தில் நடிக்க வந்திருப்பது பற்றியும் ஹீரோ விஜயகாந்த் என்றும் சொன்னேன்.

அவள் 'உல்லாசம்' என்ற படத்தில் நடிக்க வந்ததாகவும், அதே ஓட்டலில் தான் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.

மகஸ்வரியும், நானும் நெருங்கிய தோழிகள். சென்னையில் இருந்தால் நேரில் சந்திப்பதை தவற விடமாட்டோம்.

ஆனால் அந்த காலகட்டத்தில் பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால், ஓய்வெடுக்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருந்தேன். அப்படியிருக்கும் போது நாங்கள் சந்திக்க ஏது நேரம்?


ஆனால் எதிர்பாராத இடத்தில் அன்று சந்தித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவரும் படப்பிடிப்பில் எவ்வளவு உல்லாசமாக இருந்தோமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வளவு உல்லாசமாக கிடைத்த நேரத்தில் பொழுது போக்கினோம்.

தினமும் படப்பி டிப்பு முடிந்து ஓட்டலில் தங்கியிருக்கும் போது ஒன்றாக நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்வது, ஒன்றாக சாப்பிட செல்வது... அப்பப்பா.... அப்படி ஒரு சந்தோசம்!

பொதுவாக படப்பிடிப்புகளில் இருக்கும் போது நண்பர்கள், உறவி னர்கள் என்று பேசி மகிழ்வது, பொழுது போக்குவது இயலாது. படக்காட்சிகளை பற்றிய சந்தினை, அதற்கான ஏற்பாடுகளில் தான் கவனமாக இருப்போம்.

இந்த மாதிரி வாய்ப்புகள் எப்போதாவது கிடைக்கும். எங்களை பார்த்த படக்குழுவினர் 'மேடம், யார் எந்த குழுவில் இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்வார்கள்.

விஜயகாந்த் சாரோடு நடிப்பதே திரில் லிங்கா இருக்கும். இந்த படத்திலும் கோவா கடலில் அதிவிரைவு படகில் அழைத்து சென்றார். படகின் வேகமும், அது தண்ணீரை கிழித்தபடி பாய்ந்து சென்றதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் திக்.. திக்.. என்று இருக்கும். திரில்லிங்கான அந்த அனுபவம் என்றும் மறக்க முடியாதது.

படத்தில் கதாபாத்திரத்துக்கும் 'மீனா' என்று என் நிஜப்பெயரையே பெயரையே சூட்டியிருந்தார்கள். படம் முழுவதும் 'மீனா... மீனா..' என்று ஒவ்வொருவரும் டயலாக் பேசுவதை கேட்டதும் அது ஒரு சந்தோசம்.

அதை விட என் பெயரில் ஒரு பாடலே வைத்திருந்தார்கள்.

'மீனா உன் கண்ணுக்குள்ள

மின்னலென்ன...' என்ற பாடலுக்கு நானும் விஜயகாந்த் சாரும் ஆடுவோம். என் பெயருக்கேற்ற துடுக்குத்தனமான பாட்டு. அந்த பாடலுக்கு ஏற்ப ரசித்து ரசித்து நடித்தேன்.


அந்த பாடல் காட்சி முழுவதும் வண்ண வண்ண சேலை கட்டி தலைநிறைய பூ வைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் இளம் பெண்களுக்கே உரித்தான துள்ளல் காட்சிகள். எனவே அந்த ஷூட்டிங் நட்பு ரீதியான சந்தோ சமான அனுபவத்தை கொடுத்தது. அதே போல் எனக்கு கலா மாஸ்டர், மகேஸ்வ ரிக்கு பிருந்தா மாஸ்டர். அவர்களும் இருவரும் ஒரே இடத்தில் தங்கி இருக்க நேர்ந்ததால் அக்களும்-தங்கையும் தனியாக கூட்டணி போட்டிருந்தார்கள்.

ஆக, உளவுத்துறை உற்சாகதுறையாக எங்களுக்கு அமைந்தது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த நேரம். ஆனா லும் தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா சாரோடு நடித்த தில்லை. இந்த நிலையில் அவரோடு ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது.

கால்ஷீட் நெருக்கடி யாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்தேன். படத்தின் கதையும் எனக்கு பிடித்து இருந்தது.


அந்த படத்தின் டைரக்டரை பற்றி செல்ல வேண்டுமென்றால் அவர் 'பாடல் ஸ்பெச லிஸ்ட்' என்று சொல்லலாம். தெலுங்கு பட உலகில் அவரது படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாக இருந்தது.

எனவே அந்த படத்தில் எப்படி யாவது நடிக்க வேண்டும்!

அது என்ன படம்? நடந்தது என்ன என்பதை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்..

(தொடரும்...)

Tags:    

Similar News