சிறப்புக் கட்டுரைகள்

மூட்டு வலியை போக்கும் அதிநவீன ரோபோடிக் சிகிச்சை

Published On 2024-03-10 11:20 GMT   |   Update On 2024-03-10 11:20 GMT
  • மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.
  • மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது “ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

மூட்டு வலி என்பது பொதுவாக எலும்புகளின் தேய்மானத்தாலேயே உருவாகிறது. ஒரு காலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த மூட்டுவலி, இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலும் இந்த மூட்டுவலியானது தற்போது காணப்படுகிறது.

மூட்டுத் தேய்மானம் மற்றும் மூட்டுவாதம் என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்களை பாதிக்கிறது.

நோயின் ஆரம்பத்தில் சிறுமூட்டுகளில் வலியும், வீக்கமும், இறுக்கமும் நமக்கு தொல்லை கொடுக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காலையில் எழும்போது ஒரு மணிநேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். நாட்கள் செல்ல, செல்ல நம்மால் நடக்க முடியாது. அவ்வளவு ஏன் நாம் தினந்தோறும் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளை கூட நம்மால் செய்ய முடியாமல் அவதிப்படும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது மூட்டுவலி.

மூட்டு வலி கடுமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் உடனே ஆபரேஷன் தான் செய்ய வேண்டும் என நினைத்து விடக்கூடாது. மூட்டுவலிக்கான மூட்டு மாற்று ஆபரேஷன் என்பது கடைசி கட்டத்தில் பண்ணக்கூடிய சிகிச்சை. அதற்கு முன்பாக சில எளிய சிகிச்சை முறைகளும் உள்ளன. அதன் மூலமும் மூட்டு வலியை நாம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மூட்டுத் தேய்மானம் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் நாம் நம்முடைய வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களையும், சில வைத்திய முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதுமட்டுமின்றி உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு, யோகாசனம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டு தேய்மானத்தை சிறிது நாட்கள் தள்ளிபோடலாம் அல்லது தடை படுத்தலாம்.

இந்த பயிற்சிகளை தவிர மருத்துவ ரீதியாகவும் சில எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்ப கட்ட மூட்டு தேய்மானத்தை குளுக்கோசமான் மூட்டு டானிக் மருந்தாலும், நோயாளியின் உடம்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரத்த அணுக்களை(பி.ஆர்.பி இன்ஜக்ஷன்) மூட்டினுள் செலுத்துவதாலும், நோயாளியின் வயிற்று பகுதி அல்லது இடுப்பு எலும்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலச் செல்களை மூட்டினுள் செலுத்துவதன் மூலமும், மூட்டு தேய்மானத்தையும், அதனால் வரக் கூடிய வலியில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கும்.முழங்கால் மூட்டில் ஆரம்ப கட்ட வலி இருக்கும் நோயாளிகள் பலரை நாங்கள் பார்க்கிறோம். இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் 30 முதல் 40 வயதுடையவர்கள் தான்.

இவர்களுக்கு கால் லேசாக வளைந்து இருக்கும். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமலே, வேறு சில அறுவை சிகிச்சைகள் உள்ளன. மூட்டின் வளைவு தன்மையை நேர்படுத்தி, உள்ளே ஒரு உலோகத்தகடு பொருத்துவது தான் இந்த சிகிச்சை முறை.

அதாவது மூட்டின் ஒரு பகுதி தேய்ந்திருந்தால், அந்த பகுதியின் வளைவை மட்டும் தேர்ந்தெடுத்து, சரி செய்து, நேராக்குவது. அப்படி காலை நேராக்கும் போது, மூட்டு தேய்மானம் அதிகமாவதில்லை. வலியும் போய்விடும். இந்த சிகிச்சை முறையும் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

ஆனால் மூட்டு மிகவும் தேய்ந்து வளைந்து போனால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் நிரந்தரத் தீர்வு ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது "ஆர்த்ரோபிளாஸ்டி என்றழைக்கப்படும் எலும்பியல் சிகிச்சை ஆகும்.

இது செயல்படாத, சேதமடைந்த அல்லது செயலற்ற மூட்டுகளை பிளாஸ்டிக், உலோகம் அல்லது பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட செயற்கை இணைப்பு மூலம் மாற்றுவதுதான் இந்த நடைமுறையாகும். இப்படிப்பட்ட மூட்டு அறுவை சிகிச்சையானது கோவையில் உள்ள எங்கள் ஆஸ்பத்திரியில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

உலக அளவில் இந்த அறுவை சிகிச்சையானது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி நோயாளிகளுக்கு மிகப் பெரிய நிவாரணியாக இருந்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது பல முன்னேற்றங்களை கண்டுவிட்டது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்யும் முறை, அதில் உபயோகப்படுத்தப்படும் உலோக செயற்கை மூட்டுக்கள், அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து போன்றவற்றிலும் மிகப்பெரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமானது கம்ப்யூட்டர் கொண்டு செயல்படுத்தப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான். கோவை கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சை முறையானது கடந்த 2004-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பலரும் பயன் அடைந்துள்ளனர்.

இருந்த போதிலும் அறிவியல் வளர்ச்சி அதிகமுள்ள இந்த காலகட்டத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மிக துல்லியமான சிகிச்சை முறைகள் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். அப்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இருப்பதை அறிந்து கொண்டோம்.

இந்த ரோபோட்டிக் கருவி உதவியுடன் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகவும் துல்லியமாக இருப்பதால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை களில் முன்னோடியாக இது திகழ்ந்து வருகிறது.

இப்பொழுது இந்த சிகிச்சை முறை எங்கள் ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ரோபோட்(கோரி ரோபோட்) மேம்படுத்தப்பட்ட கருவி ஆகும்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மூட்டின் தேய்ந்து போன சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை அகற்றி விட்டு செயற்கை மூட்டை பொருத்துவதாகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ரோபோட்டிக் எந்திரம் மிக துல்லியமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும். இந்த சிகிச்சையானது மற்ற சிகிச்சை முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

சாதாரண மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் சில மில்லி மீட்டர் எலும்பின் நுனிப்பகுதியை எடுக்கிறோம். இந்த சிகிச்சை முறையில் எலும்பின் பாகங்கள் சிறிதே அகற்றப்படும்.

அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போது மிகச் சிறிய அளவிலேயே தசைகள் ஒதுக்கப்படும். மற்ற சிகிச்சைகளில் இருந்து ரத்த போக்கும் குறைவாகவே இருக்கும். இதனால் நோயாளிகளுக்கு ஆபரேஷனால் உண்டான வலியும் குறைவாகவே இருக்கும்.

நமது உடம்பில் உள்ள மென்மையான திசுக்களை பாதுகாத்து நோயாளி விரைவில் குணம் அடையவும் இந்த சிகிச்சை முறையானது உதவிகரமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் கருவி அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்து முடித்து விடுகிறது.

மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பின்பு குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவையும் இந்த ரோபோடிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கிறது.

இதன் மூலம் நோயாளி மிக விரைவிலேயே குணம் அடைந்து, வீடு திரும்ப முடியும். இதனால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகிறது. ஒரே நேரத்தில் 2 மூட்டுக்களையும் மாற்றும் போது இந்த ரோபோடிக் கருவி மிக உதவிகரமாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையால் எங்கள் ஆஸ்பத்திரியில் பல நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.

இந்த சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வீடு திரும்புகிறார்கள். இந்த சிகிச்சை முறையானது மிக துல்லியமாக செயல்படுத்தப்படுவதால், இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட நாட்களுக்கு செயல்படும் என உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

இந்த ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை எங்கள் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் திருமலைச்சாமி, லெனின் பாபு, தென்னவன், பாஸ்கரன், பூபதி கிருஷ்ணன் ஆகியோர் செய்கின்றனர்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோடிக் கருவி சிகிச்சையை அறிமுகப்படுத்தியது போன்று இந்தியாவிலேயே முதல் முறையாக 3 டிசி ஆர்ம் என்ற இமேஜிங் கருவியையும் எங்கள் ஆஸ்பத்திரி அறிமுகம் செய்துள்ளது.

எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனை கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இந்த தொழில்நுட்ப சிகிச்சை உதவுகிறது.

முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் போன்றவற்றை துல்லியமாக பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாக உள்ளது.

இதர அறுவை சிகிச்சை துறைகளை போல எலும்பு மருத்துவ துறையில் நோயாளியின் சவுகரியத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம் சிறப்புடன் செயல்படுகிறது.

மூட்டு வலி ஏற்பட்டால் ஆரம்ப காலகட்டத்தில் எளிய முறை சிகிச்சைகளிலும், நாள்பட்ட மூட்டு வலிக்கு ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையாலும் நல்ல முறையில் மருத்துவம் அளிக்கலாம்.

தொடர்புக்கு: 73393 33485

Tags:    

Similar News