நீரிழிவுக்கு சித்தா தரும் தீர்வு
- நீரிழிவு வருவதற்கு இதுதான் காரணம் என்ற வரையறுத்து கூறய இயலாது.
- சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் அது குணமாக நீண்ட நாளாகும். எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அழகான பங்களா, கார், குறிப்பறிந்து பம்பரமாய்ச் சுற்றும் பணியாளர்கள், இப்படி வசதியோடு வாழ்பவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் குடிப்பதோ கோதுமைக் கஞ்சி, கேப்பைக்கூழ், சர்க்கரை இல்லாத காபி.கேட்டால் எனக்கு டையபாடிஸ் என்ற நாகரீகப் பாணியில் பதில் சொல்வார்கள்.
சர்க்கரை வியாதிக்கு சித்த மருத்துவத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமுத்திரம், மது மேகம், நீரிழிவு என்று பெயர்கள் சூட்டி உள்ளனர். ஆனால் 17-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் சீறுநீரில் சர்க்கரை இருந்தால் நீரிழிவு என்று கண்டுபிடித்து நவீன மருத்துவம் பெயர் சூட்டியது.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நீரிழிவு வியாதி வியாபித்துள்ளது. சுமார் 15 கோடி மக்கள் உலகம் முழுவதும் இவ்வியாதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணக்காரர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத் நீரையும் இவ்வியாதி விடுவதில்லை. இருதய நோய், புற்று நோய் ஆகியவைகளுக்கு அடுத்து இன்று அமெரிக்காவில் நீரிழிவு நோயினால்தான் அதிகம் பேர் மரணமடைகிறார்களாம்.
நமது நாட்டில் சுமார் 60 லட்சம் மக்கள் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் உள்ளவர்களைத்தான் இந்நோய் அதிகமாகப் பிடித்துள்ளது. 15 வயதிலிருந்து 30 வயது வரை அரை சதவீதம் பேருக்கும் 30 வயதிலிருந்து 40 வயது வரை 1 சதவீதம் பேருக்கும், 40-க்கு மேற்பட்ட வயதுடையோரிடம் 4 சதவீதம் மக்களும் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிகிறது.
குறிப்பாக 90 சதவீதம் வயதானவர்களிடம் இந்த நோய் காணப்படுகிறது. தந்தையும், தாயும் நீரிழிவுக்காரராக இருந்தால் பிள்ளைகளுக்கு 100 சதவீதம் இந்நோய் வர வாய்ப்புள்ளது. தாயோ, தந்ைதயோ இருவரின் ஒருவர் நீரிழிவுக்காரராக இருந்தால் 25 சதவீதம் பிள்ளைகளுக்கு தொடர வாய்ப்புள்ளது. மேலும் நீரிழிவு உள்ளவர்களின் 75 சதவீதம் அதிகம் எடையுள்ளவர்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.
நமது உடலில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. அது சுரக்கும் நீரால்தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை ஜீரணிக்கப்படுகிறது. நம் எல்லோருடைய ரத்தத்தில் சர்க்கரை, குளுக்கோஸ் வடிவத்தில் சிறிதளவு இருக்கிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தில் இருந்தால்தான் திசுக்கள், மூளை, சிவப்பணு ஆகியவை பலம் பெறும். சாதாரணமாக மனித ரத்தத்தில் 100 மில்லிக்கு 150 மில்லி கிராம் வீதம் சர்க்கரை மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன.
மாவுப் பொருள் எரிக்கப்பட்டு சக்தி வெளிப்படுகிறது. அவ்வாறு எரிக்கப்படும்போது கணையம் சுரக்கும். கணையத்தில் உள்ள நீரில் இன்சுலின்தான் க்ரியா ஊக்கிரியாக வேலை செய்கிறது. இன்சுலின் சுரப்பு கூடினாலோ குறைந்தாலோ தவறு. இன்சுலின் அதிகமாக சுரந்தால் உடல் சக்திக்கு வேண்டிய சர்க்கரையின் அளவு குறைந்து சர்க்கரை வறட்சி நோய் ஏற்படுகிறது.
குறைவாக சுரந்தால் உணவில் உள்ள சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்காமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் கொண்டே போனால் அதிகப்படியான சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதற்காக சிறுநீர் அடிக்கடி வெளியேறுகிறது. இதைத்தான் நீரிழிவு நோய் என்கிறோம்.
நீரிழிவு ஒரு குறிப்பிட்டவர்களுக்குத்தான் வரும் என்றில்லை, ஏழை, பணக்காரன், ஆண், பெண் இருபாலாருக்கும் வரலாம். அடிக்கடி மகப்பேறு உள்ள பெண்கள் இதனால் பதிக்கப்படுகின்றனர் நீரிழிவு வருவதற்கு இதுதான் காரணம் என்ற வரையறுத்து கூறய இயலாது.
ஆனால் வயது, பருத்த உடல், பரம்பரையாக நோயுறுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிவையினாலும் வரலாம். உடலுக்கு அதிக வேலை தராதவருக்கும், உடல் பயிற்சி செய்யதவாருக்கும், இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதில் அதிக நட்டம் உள்ளவர்களுக்கும் நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நீரிழிவுக்காரர் கை கால் கழுவும் போதும், குளிக்கும்போதும், வெந்நீரை உபயோகிக்க வேண்டும். நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும், காலணிகளை கண்டிப்பாக அணிய வேண்டும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் அது குணமாக நீண்ட நாளாகும். எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவுக்காரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாக இவர்கள் நாக்குக்கு அடிமையாகக் கூடாது. வயிறு புடைக்க உண்ணுவதை தவிர்க்க வேண்டும். 2 வேளை அல்லது 3 வேளை என்ற வயிறு நிறைய உண்பதை விட அதே உணவைச்வைச் சிறு சிறு இடைவெளி விட்டுக் குறைந்த அளவு உண்ண வேண்டும். மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு வகைகளையும் சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள்., பிஸ்கட், சாக்லெட், ஐஸ்கிரிம் மற்றும் குளிர் பானங்கள் இவற்றை அறவே நீக்க வேண்டும்.
இத்தகைய உணவுப்பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும் தன்மை உடையவை. நீரிழிவு நோய் உடையவர்களுக்குத் தாகமும் ஆயாசமும் அதிகமாக இருக்கும். அவர்கள் தக்காளி ஜூஸ், தண்ணீர், மோர் இவைகளை ஏராளமாக பருகலாம். பழச்சாறுகளைப் பருகக் கூடாது. ஆனால் பழங்களை புரத உணவுடன் சேர்த்து உண்ணலாம். கேழ்வரகு, கோதுமை ஆகியவை நீரிழிவுக்காரர்களுக்கு முற்றிலும் ஏற்ற உணவு.
பப்பாளிக்காய், புடலங்காய், தக்காளி, வெண்டைக்காய், காலிப்ளவர், முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றில் மிக மிக குறைவாக புரதச்சத்து உள்ளதால் இவைகளை அதிகமாக உண்ணலாம். இத்தகைய மாவுக் கட்டுப்பாடும். லேசான உடற்பயிற்சியும் ஆசனங்களும் சர்க்கரை வியாதிக்காரர்களை விரைவில் குணமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
பலநூறுஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதினெண் சித்தர்களால் அருளப்பட்ட சித்த மருத்துவத்தால் முற்றிலும் குணமாக்க கூடிய வியாதி, நீரிழிவு. மான் கொம்பு. ஆமையோடு சீனாக்காரம் ஆகியவைகளைச் சுத்தி செய்து பஸ்பமாக்கி கொடுப்பதால் நீரிழிவு குணமாகிறது. கல்யாணி (சுடுகாட்டுமல்லிகை) என்னும் மூலிகைச் சர்க்கரை நோயாளியின் புண்ணிற்கு அருமருந்தென்றும், சர்க்கரை கொல்லி என்று குறிப்படப் பெறும் சிறு குறிஞ்சான் என்னும் பச்சிலையால் மது மேகம் குணமாகும். மருதம் பட்டை, நாவல் பட்டை, ஆலம் விழுது இவை வகைக்கு 50 கிராம் எடுத்துத் தட்டி லிட்டர் நீரில் போட்டு, சுண்டக் காய்ச்சி வடித்துப் பாதியைக் காலையிலும், மீதியை மாலையிலும் குடிக்கலாம்.
நெல்லிக்காய்ச் சாறு 100 மில்லி, தேன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர அதிக மூத்திர ரோகம் கட்டுப்படும்.
ஆடையொட்டி இலை, நாவல் மரத்துப்பட்டை, மாங்கொட்டைப் பருப்பு ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து 1/2லிட்டர் தண்ணீரில் போட்டு மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை, மூன்று வேளை குடித்துவர நீரிழிவு நோய் முற்றும் நீங்கும்.
கீழா நெல்லி 50 கிராம், மிளகு 25 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் தட்டிப் போட்டு 100 மி.லி ஆக சுண்ட வைத்துக் கொண்டு 100 மிளகுத் தூள் செய்து போட்டு அரை அவுன்ஸ் வீதம் காலை மாலை, குடித்துவர 3 வாரங்களில் நீரிழிவு நீங்கிவிடும்.
ஆலம்பட்டை, ஆலமரத்து வேர்ப்பட்டை இவைகளை பச்சையாக வகைக்கு 50 கிராம் எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு 1 குவளை நீர் விட்டு நன்றாக ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர நீரிழிவு குணமாகும். (ஆனால் நீண்ட நாள் இம்மருந்தைச் சாப்பிட்டு வரவேண்டும்)
உலர்ந்த வெள்ளருகுச் சமூலம் 50 கிராம் எடுத்துப் பொன் வறுவலாக வறுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லியாக வற்ற வைத்து வேளைக்கு மிகையாக தினம் காலை, மாலை குடிக்க ஆரம்ப நீரிழிவு 10 நாட்களில் குணமாகும். (தினமும் புதிதாக இந்தக் கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்).
முள்ளங்கியைத் திருகி நிழலில் உலர்த்தி நெய், பனங்கற்கண்டு, தேன், பேரிச்சம் பழம் முதலியவை சேர்த்து லேகியமாகச் செய்து காலை, ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் விரைவில் குணமாகும்.
நிறையக் கீரையைச் சமைத்துத் தினமும் பகல் உணவில் தொடர்ந்து உண்டு வரத் தணியாத தாகம் தணிந்து நீரிழிவு குணமாகும்.