சிறப்புக் கட்டுரைகள்

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்!

Published On 2026-03-02 17:30 IST   |   Update On 2026-03-02 17:30:00 IST
  • ரத்த நாளங்களில் கொழுப்பு படிகின்றது.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு கூடுதலாக இருக்கின்றது.

சர்க்கரை நோயினைப் பற்றி அடிக்கடி பல மருத்துவர்கள் தொடர்ந்து பேசியும், எழுதியும் வலியுறுத்தி வருகின்றனர். இன்று இந்த பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சர்க்கரை என்பது உடலுக்குத் தேவையான ஆற்றல் மூலமாக இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் அதிகமாக இருந்தால் அது உடலின் பல முக்கிய உறுப்புகளை மெதுவாகவும், ஆழமாகவும் பாதிக்கின்றது. இந்த பாதிப்புகள் "நீரிழிவு பாதிப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் வருமாறு:-

மூளை- அதிக சர்க்கரையால்

* மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கிறது.

* நினைவாற்றல் குறைவு ஏற்படுகின்றது.

* மூளையில் ரத்த கசிவு, அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

* சிந்திக்கும் திறன் தடைப்படும்.

* மனச் சோர்வு ஏற்படும்.

* செயல் திறன் குறையும்.

* முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.

* கூர்ந்து கவனிக்கும் செயல் திறன் மாறுப்படும்.

* பலவீனம், நடப்பதில் சிரமம், நடுக்கம் போன்றவை இருக்கும்.

* மனசோர்வு, எதிர்ப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஏற்படும்.

கண்கள் நீரிழிவு பாதிப்பால் விழித்திரை நோய் ஏற்படும்.

* பார்வை மங்கல்

* கண் ரத்த நாளங்களில் கசிவு

* முழுமையான பார்வை இழப்பு

* காட்டராக்ட்

* கிளா கோமா ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

இதயம்- கொலஸ்டிரால் அளவினை உயர்த்துகின்றது

* ரத்த நாளங்களில் கொழுப்பு படிகின்றது. அதனால்

* இருதய நோய்

* இருதய ரத்த குழாய்களில் அடைப்பு

* இருதய செயலிழப்பு

* நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு கூடுதலாக இருக்கின்றது.

சிறுநீரகங்கள்- அதிக சர்க்கரையால்

* சிறுநீரில் புரதம் வெளியாகின்றது.

* சிறுநீரக வடிகட்டும் திறன் குறைகின்றது

* சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றது.

* டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகின்றது.

நரம்பு மண்டலம்- கை, கால் விரல்களில் பின் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

* மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு

* உணர்ச்சி இழப்பு ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக

* காயம் ஏற்பட்டாலும் தெரியாமல் போகும்.

கமலி ஸ்ரீபால்

 

* பாதங்களில் புண்கள் ஏற்படும்.

கல்லீரல்

* கொழுப்பு கல்லீரல் ஏற்படும்.

* இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்.

* கல்லீரல் செயல்பாடு பாதிக்கும்.

ஜீரண அமைப்பு-

* வயிறு செரிமான செயலில் தாமதம்

* வாந்தி

* அஜீரணம்

* மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும்.

தோல்- * தோல் வறட்சி * புண்கள் ஆற தாமதம் * பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று * கருப்பு நிற தடிப்பு ஆகியவை ஏற்படும்.

இனப்பெருக்க உறுப்பு- ஆண்களுக்கு விந்தணு தரம் குறைவு ஏற்படும். * பெண்களுக்கு ஹார்மோன் சீரற்ற நிலை, கர்ப்ப சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

நோய் எதிர்ப்பு சக்தி- * நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றது. *அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படும். * காயம் ஆற தாமதம் ஏற்படும்.

சர்க்கரை நோய் என்பது ஒரே ஒரு நோய் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது முழு உடலையும் மெதுவாக பாதிக்கும் ஒரு அமைதியான ஆபத்து.

சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, காலாண்டு மருத்துவ பரிசோதனை இவைகளை கடைபிடித்தால் உறுப்புகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உடல் எடை குறைப்பு- உடல் எடை குறைப்பு என்பது இன்று மிகப்பெரிய சவாலாகவே இருக்கின்றது. எளிதில் கூடி விடும் எடையினை குறைக்க படாதபாடாக இருக்கின்றது. ஆனால் அன்றாடம் நம் பழக்கங்களில் சிறிது கவனம் செலுத்தினாலே போதும். அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட சில அன்றாட பழக்கங்களை பார்ப்போம்.

எடை குறைப்பிற்கு உதவும் காலை பழக்கங்கள்-

அதிகாலையில் எழுதல்- காலை 5 மணி அளவில் முதலில் எழுந்து பழக வேண்டும். இது உடல் கடிகாரம் சீராக இயங்க உதவும். ஹார்மோன்களை சமநிலைப் படுத்தும். உடல் இயக்கத்தினை சீராய் தூண்டும்.

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் 1 அல்லது 2 கிளாஸ் குடிப்பது ஜீரண சக்தியினை அதிகரித்து உடலில் தேங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றது.

வெறும் வயிற்றில் உடல் பயிற்சி- மிதமான நடை, யோகா, சூரிய நமஸ்காரம் அல்லது லேசான ஸ்ட்ரெச் செய்வது கொழுப்பு எடுப்பை அதிகரிக்கின்றது. தினமும் 20 நிமிட உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகின்றது.

புரதம் நிறைந்த காலை உணவு- முட்டை, பருப்பு, முளை கட்டிய தானியங்கள், தயிர் போன்ற புரத உணவுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி அதிக கலோரி உட்கொள்ளுதலை தவிர்க்கின்றன.

 

சர்க்கரை மற்றும் வெள்ளை மாவு உணவுகளைத் தவிர்த்தல்- காலை நேரத்தில் இனிப்புகள் மற்றும் ரிபைன் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது இன்சுலின் திடீர் உயர்வை குறைத்து எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

* போதுமான சூரிய ஒளி பெற வேண்டும்.

மன அழுத்தம் குறைக்கும் பயிற்சிகள்:

தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை கார்டிசோர் அளவை குறைத்து வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகின்றது.

* சரியான நேரத்தில் மாலை சிற்றுண்டி 4 முதல் 5 மணிக்குள் (இரவு உணவைப் பொறுத்தும், பகல் உணவை பொறுத்தும் இது சற்று மாறுபடும்).

* பழங்கள், வறுத்த கடலை, முளை கட்டிய பயறு, கிரீன் (அ) மூலிகை டீ எடுத்துக் கொள்ளலாம்.

* மாலை நேரத்தில் நடை அல்லது உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். இரவு நல்ல தூக்கம் வரும்.

* சர்க்கரை, எண்ணை அதிகமான உணவுகளை பஜ்ஜி, போண்டா, இனிப்பு வகைகள் இவைகளை அவசியம் தடுக்க வேண்டும்.

* தண்ணீர் போதுமான அளவு குடிப்பது.

* இரவு உணவை முன்னதாகவே தீர்மானித்து எளிமையான கலோரி சத்து அதிகமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்வது.

* இரவில் அதிக நேரம் டி.வி, செல்போன் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் எடைகூடாமல் சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பார்வைத்திறனை இயற்கையாகவே மேம்படுத்த:

* பார்வைத்திறன் குறைபாடு பல காரணங்களால் ஏற்படுகிறது. வயது மாற்றம், அதிக நேரம் கணினி திரை பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு போன்ற நோய்கள், கண் சோர்வு ஆகியவை முக்கியமானவை. இயற்கை முறைகளின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தலாம்.

* சரியான உணவுமுறை அவசியம்: கண் நலத்திற்கு முக்கியமான சத்துக்களாக உள்ள வைட்டமின் ஏ நிறைந்த காரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, முருங்கை கீரை, பசலைக்கீரை ஆகியவை ரெட்டினாலின் செயல்பாட்டிற்கு அவசியம். இது இரவு கண் தெரியாமையினைத் தடுக்கும்.

* லூட்டின், சீ ஆக்சாந்தின் சத்துகள் பச்சை கீரை வகைகள், மக்காச்சோளம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றது. இவை மாக்குலா பாதுகாப்பிற்கு உதவும். வயது சார்ந்த மாக்குலா சேதத்தினைத் தடுக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை வால்நட், ஆலிவ் எண்ணை, ஆளிவிதை இவற்றில் கிடைக்கும். இவை கண் ஆரோக்கியத்தினை பாதுகாத்து கண் உலர்வினையும் தடுக்கும்.

வைட்டமின் சி, ஈ போன்றவை ஆரஞ்சு, நெல்லிக்காய், பழங்கள், பாதாம் இவற்றில் கிடைக்கும். ஆண்டி ஆக்சிடென்ட் செயல்பாடு கொண்டவை.

கண் பயிற்சிகள்

20-20-20 விதி:

20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பாருங்கள்.

* கைகளால் கண் ஓய்வு: கைகளால் உரசி சூடு ஏற்படுத்தி கண்களின் மேல் மெதுவாக பொத்தி 1 முதல் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். நரம்பு தளர்ச்சி குறையும். தவிர்க்கப்படும்.

* அருகில் உள்ள பொருளை 10 நொடிகள் பாருங்கள். தூரத்தில் உள்ள பொருளை 10 நொடிகள் பாருங்கள். கண் தசைகள் வலுப்படும்.

* 7 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் ரெட்டினா மற்றும் நரம்பு அமைப்பிற்கு ஓய்வு கிடைக்கின்றது. கண் உலர்வு குறைகின்றது.

* மொபைல், கம்ப்யூட்டர் பயன்பாட்டினை குறைத்து விடுங்கள்.

* நீலநிற பில்டர் பயன்படுத்துங்கள்

* உங்கள் அறையில் ஒளி சரியாக இருக்க வேண்டும்.

* வெய்யில் காலத்தில் யூ.வி. பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும்.

* தூசி சூழலில் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும்.

* தராடகா. ஒரு நிலையான பொருளை (உதாரணமாக) தீபம் போன்றதை கண் இமைக்காமல் கவனிப்பது, பார்ப்பதால் - ஒரு முக கவனம் மற்றும் கண் தசை ஒருங்கிணைப்பு மேம்படும்.

Tags:    

Similar News