2025 - ஒரு பார்வை

2025 REWIND: மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிசில்டா... ட்விஸ்ட் நிறைந்த காதல் - திருமண சர்ச்சை!

Published On 2025-12-29 14:00 IST   |   Update On 2025-12-29 14:00:00 IST
  • செஃப்-நடிகர் ரங்கராஜ், தனது சமையல் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்
  • ரங்கராஜின் வாழ்க்கை ஒரு பெரிய சினிமா ஸ்கிரிப்ட் போல ட்விஸ்ட் நிறைந்த சர்ச்சையாக மாறியது.

2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சர்ச்சைகளின் ஆண்டாக அமைந்தது என்றால், அதில் முதல் இடம் பிடிப்பது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இடையேயான விவகாரம் தான்!

'குக் வித் கோமாளி' ஷோவால் பிரபலமான செஃப்-நடிகர் ரங்கராஜ், தனது சமையல் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், இந்த முறை அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பெரிய சினிமா ஸ்கிரிப்ட் போல ட்விஸ்ட் நிறைந்த சர்ச்சையாக மாறியது.

காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்பட்ட உறவு, அதனால் ஜாய் கிரிசில்டா கர்ப்பமானது, பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் இந்தாண்டின் பரபரப்பான விஷயமாக இருந்தது.

இதோ இந்த விவகாரத்தின் சுவாரசியமான பின்னணியை இந்த கட்டுரையில் பார்ப்போம்...

மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் டிவி உலகில் 'குக் வித் கோமாளி' மூலம் ஸ்டார் ஆனவர். அவரது ஜாலியான பேச்சு, சமையல் டிப்ஸ் மற்றும் காமெடி டைமிங் ரசிகர்களை கவர்ந்தது. முன்னதக சில படங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி தான் அவருக்கு தமிழகம் முழுவதும் பெரும் புகழும் பெற்று தந்தது.

ஸ்ருதி என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ்க்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ரங்கராஜன் வாழ்க்கையில் ஜாய் கிரிசில்டா எனும் புயல் வீசியதால் அவரது பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆனது.

ஜாய் கிரிசில்டா, தமிழ் சினிமாவில் பல படங்களில் காஸ்ட்யூம்களை டிசைன் செய்தவர். அவர் விஜய், அஜித் போன்ற டாப் ஸ்டார்களின் படங்களில் வேலை செய்திருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை -யாருக்கும் தெரியாத வகையிலேயே இருந்தது. ஆனால், ரங்கராஜுடனான உறவு இவர்களை ஸ்பாட்லைட்டுக்கு கொண்டு வந்தது.

ஆகஸ்ட் 29, 2025 - இந்த தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாது. ஜாய் கிரிசில்டா, தனது தாயுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ரங்கராஜ் மீது புகார் அளித்தார். ரங்கராஜுடன் உறவு ஏற்பட்டு, அதன் விளைவாக தான் கர்ப்பமான பிறகு அவர் தன்னை ஏமாற்றினார் என்று அந்த புகாரில் தெரிவித்தார். என்று ஜாய் கூறியது சோஷியல் மீடியாவை அதிர வைத்தது.

போலீஸ் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை தொடங்கியது, ஆனால் தற்போது வரை இது வெறும் அலிகேஷன்கள் மட்டுமே இன்னும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்த புகார் தமிழ் சினிமாவில் பெரிய அலையை ஏற்படுத்தியது.

ஜாய் கிரிசில்டா புகாரால் ரங்கராஜன் இமேஜை டேமேஜ் ஆனது. ரங்கராஜின் படங்கள், ஷோக்கள் எல்லாம் ட்ரோல் ஆகத் தொடங்கின!

ஜாய் கொடுத்த புகார் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையதுதான் என்று ஜாய் கிரிசில்டா அழுத்தம் திருத்தமாக கூற, இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது வரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு ரங்கராஜ் வரவில்லை என்று ஜாய் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே ஜாய் புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எங்களுடைய திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது. கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்" என்று பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து ஜாய் புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் மனைவியும் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம். இந்த செயல்கள் அனைத்தும் பணத்திற்காகவும் எங்கள் குடும்பத்தின் அமைதியை கெடுக்கும் நோக்கில் உள்ளன. நான் என் கணவருடன் உறுதியாக நின்று கடைசி வரை அவரைப் பாதுகாப்பேன்" என்று தெரிவித்திருந்தார். ரங்கராஜின் மனைவி ஸ்ருதி அவருடன் உறுதியாக உள்ளார் என்று அவரது அறிக்கை நமக்கு கூறியது.

க்ளைமேக்ஸ்: என்ன நடக்கும்?

2025 இறுதியில் இந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. ரங்கராஜ் தனது இமேஜை ரீபில்ட் செய்ய புதிய ஷோக்களில் கம்பேக் கொடுப்பாரா? ஜாய் சினிமாவில் திரும்புவாரா? தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு ரியல்-லைஃப் சீரியல்! ஒன்று மட்டும் உறுதி – இது போன்ற சர்ச்சைகள் தான் கோலிவுட்டை எப்போதும் ஹாட் டாபிக் ஆக்குகின்றன. அடுத்த அப்டேட் வரை, ஸ்டே ட்யூன்ட்!

Tags:    

Similar News