செய்திகள்

இரட்டை கேமரா கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

Published On 2017-03-21 17:48 IST   |   Update On 2017-03-21 17:48:00 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழா மார்ச் 29 இல் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் மைக்ரோமேக்ஸ் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடும் என கூறப்படுகின்றது.
புதுடெல்லி:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மார்ச் 29- இல் நடைபெற இருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அதன் படி இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை மைக்ரோமேக்ஸ் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் டூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை மைக்ரோமேக்ஸ் தயாரித்து வருவதாக கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து மைகர்ரோமேக்ஸ் E4815 (F620)  மாடல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் MT6750T 64 -பிட் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. 



இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா, செல்ஃபி பிளாஷ் வழங்கப்படுவதோடு முன்பக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மைக்ரோமேக்ஸ் பாரத் ஒன் மற்றும் பாரத் டூ என்ற பெயரில் மலிவு விலை பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்தது. இரண்டு மொபைல் போன்களிலும் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்படலாம் என்றும் இவை முறையே ரூ.1,999 மற்றும் ரூ.2,999 விலையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டது.

Similar News