செய்திகள்
ஸ்மார்ட்போன்கள் என்ன செய்தாலும், உடையாமல் உறுதியானதாக்கும் திரவம் (வீடியோ)
ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் எவ்வித கண்ணாடியையும் உறுதியானதாக்கும் இரசாயனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இருந்தால் உங்களின் பொருட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நிச்சயம் எனலாம்.
சென்னை:
எந்நேரமும் நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்கள், நம் கையில் இருந்து பலமுறை தவறி கீழே விழலாம். இதற்கெனவே பலரும் ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் புரோடெக்ஷன் கவர்களை பயன்படுத்துவர். அப்படியும் போனின் திரையை உடையாமல் பார்த்து கொள்வது கடினமான ஒன்று தான் எனலாம்.
இன்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர் உடைந்த அல்லது கீறல் விழுந்த திரை கொண்ட சாதனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலருக்கு பொருட்கள் கையில் நழுவாமல் இருக்காது. அவ்வாறானவர்களுக்கான பிரத்தியேக கண்டுபிடிப்பு தான் புரோடெக்ட் பேக்ஸ் (protect-pax).
சிறிய பாக்கெட்களில் கிடைக்கும் நீர் துளிகள் தான் புரோடெக்ட் பேக்ஸ். உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட், மானிட்டர், கண்ணாடி என அனைத்து வித சாதனங்களிலும் புரோடெக்ட் பேக்ஸ் பயன்படுத்த முடியும். இதை எப்படி பயன்படுத்துவது?
முதலில் சாதனத்தை இந்த பாக்கெட்டில் வழங்கப்பட்டுள்ள துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின் அதனுள் இருக்கும் திரவ துளிகளை திரையின் நடுவே விட்டு பின் கை விரல்களால் நன்கு துடைத்து, பத்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்ததும் உங்களது திரை உறுதியானதாகி விடும். அதில் அவ்வளவு எளிதாக கீறல் விழாது, தண்ணீர் சிந்தினாலும் வழுக்கி போகும், கீழே விழுந்தாலும் அவ்வளவு எளிதில் உடையாது.
புரோடெக்ட் பேக்ஸ் எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்.