இந்தியா

5 ஆண்டுக்கு பிறகு இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது: பயணிகள் மகிழ்ச்சி

Published On 2025-10-27 03:19 IST   |   Update On 2025-10-27 03:19:00 IST
  • கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
  • 5 ஆண்டுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

கொல்கத்தா:

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று தொடங்கியது.

ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News