இந்தியா

தனது வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்களுடன் இலவச நூலகத்தை அமைத்து நெகிழ வைத்த நபர்

Published On 2025-09-23 13:47 IST   |   Update On 2025-09-23 13:47:00 IST
  • தன் சம்பாத்தியத்தின் 80%க்கும் அதிகமானதை புத்தகம் வாங்கவே செலவழித்துள்ளார்.
  • மைசூரில் தான் குடியிருந்த வீட்டை விற்று இந்த நூலகத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கர்நாடகாவில் 20 வயதில் பேருந்து கண்டக்ட்டராக வாழ்க்கையை தொடங்கிய அன்கே கௌடா என்ற நபர் தற்போது 20 லட்சம் புத்தகங்களுடன் கூடிய இலவச நூலகத்தை அமைத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

அன்கே கௌடா தன் சம்பாத்தியத்தின் 80%க்கும் அதிகமானதை புத்தகம் வாங்கவே செலவழித்துள்ளார். தற்போது மைசூரில் தான் குடியிருந்த வீட்டை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த நூலகத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த நூலகத்தில் கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அன்கே கௌடாவின் நூலகத்திற்கு மாணவர்கள், ஆய்வாளர்கள் முதல் நீதிபதிகள் வரை வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News