முழு பலத்துடன் தயாராக வேண்டும்: தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
- டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும் என தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களும், உறுப்பினர்களும் முழு பலத்துடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக இருக்கவேண்டும். அவர்களின் (பாஜக) பெரிய அமைப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு முன் தோல்வி அடைகின்றன. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பலம்.
இந்த தேர்தல் வேலை அரசியலுக்கும், துஷ்பிரயோக அரசியலுக்கும் இடையில் இருக்கும். டெல்லி மக்கள் எங்கள் வேலை அரசியலில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிச்சயம் வெற்றி பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.