இந்தியா (National)

கேரள தலைமை செயலகம் முன்பு வன்முறை: இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் கைது

Published On 2024-01-09 06:11 GMT   |   Update On 2024-01-09 06:11 GMT
  • போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
  • கைது செய்தவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News