இந்தியா

ஜெகதீப் தன்கர், மார்கரெட் ஆல்வா

துணை ஜனாதிபதி தேர்தலில் 92.9 சதவீத வாக்குப்பதிவு- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2022-08-06 12:50 GMT   |   Update On 2022-08-06 12:50 GMT
  • துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் உள்ள 780 எம்.பி.க்களில் 725 பேர் வாக்களித்தனர்.
  • பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டி

புதுடெல்லி:

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குப்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71), எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா (80) ஆகியோர் போட்டியிட்டனர்.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்ந்து 780 எம்.பி.க்கள் உள்ளனர். இதில், 725 பேர் வாக்களித்தனர். 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

Tags:    

Similar News