இந்தியா
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா..!
- குடியரசு துணைத் தலைவர் பதவி ராஜினாமா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்.
- உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.