இந்தியா

இனிமேல் வேலையில்லா இளைஞர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும்- ம.பி. அரசு வினோத முடிவு

Published On 2025-03-27 21:56 IST   |   Update On 2025-03-27 21:56:00 IST
  • இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
  • குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வேலை இழப்பு அதிகமாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமங்களில் உள்ள சாலைகள், ஒரு ஊரின் பெயர் அல்லது ஒரு தெருவின் பெயரை மாற்றி கேட்டிருப்போம்.

ஏன்... ரெயில் நிலையம், பேருந்து நிலையத்தின் பெயரை கூட மாற்றப்பட்டது குறித்து கேள்வி பட்டிருப்போம். ஆனால் மத்திய பிரதேச அரசு ஒரு வினோதமான முடிவு எடுத்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் போன்ற உயர் படிப்பை முடித்தவர்கள் கூட வேலைக்கிடைக்காமல் திண்டாடி வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

பொதுவாக படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களை வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் என அழைப்பர். ஆனால் தற்போது இனிமேல் மத்திய பிரதேசத்தில் வேலையில்லா இளைஞர்களை வேலையில்லா இளைஞர்கள் (unemployed youth) என அழைக்கக்கூடாதாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் (Aspirational Youth) என அழைக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் மத்திய பிரதேச அரசு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக போபாலைச் சேர்ந்த பிரகாஷ் சென் கூறுகையில் "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஐ.டி. துறையில் நல்ல வேலை கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கடுமையான போட்டியின் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஏராளமானவர்கள் வேலை இழந்து உள்ளனர். தற்போது டீ ஸ்டால் நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News