இந்தியா

மத்திய பிரதேசத்தில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2025-04-02 12:55 IST   |   Update On 2025-04-02 12:55:00 IST
  • வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.

போபால்:

மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த என்கவுண்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Tags:    

Similar News