இந்தியா

ரெயில் பெட்டியை சுமந்து சென்ற லாரி உடைந்து விபத்து

Published On 2023-12-31 09:14 GMT   |   Update On 2023-12-31 09:14 GMT
  • ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
  • விபத்தால், யாருக்கும் காயம் இல்லை என தகவல்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள உல்டா புல் என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று காலை சாலை வழியாக ரெயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென பிரேக் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது.

இதில் லாரி இரண்டாக உடைந்து, ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தால், யாருக்கும் காயம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீகாரில் சாலை வழியாக கொண்டு சென்ற விமானம் மேம்பாலம் அடியில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, சாலையில் ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News