இந்தியா

தெலுங்கானாவில் நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கிய கவர்னர்

Published On 2023-04-11 11:08 IST   |   Update On 2023-04-11 11:08:00 IST
  • நிராகரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.
  • முக்கிய மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெலுங்கானா அரசு வட்டாரம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து அரசியலமைப்பு முட்டுக்கட்டை ஏற்படுத்தியதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மீதான மனுவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார்.

தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் தெலுங்கானா ஆளுநரின் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன, மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை.

இது தெலுங்கானா அரசுக்கு கவர்னர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டை தெலுங்கானா அரசு நாடியது.

இந்தநிலையில் வனவியல் பல்கலைக்கழக தெலுங்கானா மசோதா, 2022 மற்றும் தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022 ஆகிய 2 முக்கிய மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெலுங்கானா அரசு வட்டாரம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாநில அரசு தனது ஒப்புதலுக்காக அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது கவர்னர் எடுத்த நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விரிவான விவரம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News