இந்தியா

சித்தூர் அருகே லாட்ஜில் 2 இளம்பெண்களுடன் தங்கிய வாலிபர் மர்ம மரணம்- போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-08-26 03:48 GMT   |   Update On 2023-08-26 03:48 GMT
  • வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25).

இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர்.

அன்று மாலை அறையில் தங்கியிருந்த 2 பெண்கள் வினோத் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வினோத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பெண்களும் வினோத்குமார் பிணத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வினோத்குமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News