இந்தியா

இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி இளம்பெண்ணிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது

Published On 2022-11-19 03:59 GMT   |   Update On 2022-11-19 03:59 GMT
  • அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம்.
  • பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள கூடுரை சேர்ந்தவர் சேகர் (வயது 24). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்களுக்கு வலைவீசி பணம் பறிக்க திட்டமிட்டார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேகரை இன்ஸ்டாகிராமில் நண்பராக ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி அதில் தகவல்களை பரிமாறத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் சேகர் இளம்பெண்ணை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதனை இளம்பெண் ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதல் மொழிகளை பேச ஆரம்பித்தனர்.

அப்போது இளம்பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோக்களை சேகர் கேட்டு வாங்கினார். அதனை தனது இணையதளத்தில் பதிவு செய்து கொண்டார்.

சேகர் திட்டமிட்டது போல தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். இளம்பெண்ணிடம் நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் வீடியோ மற்றும் செல்போன் உரையாடல்களை ஆன்லைனில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன இளம்பெண் சேகருக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் முகவரி மூலம் சேகரை போலீசார் கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் காதல் வலை வீசினால் நம்பி ஏமாற வேண்டாம். பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News