இந்தியா

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

Published On 2022-12-03 08:51 GMT   |   Update On 2022-12-03 08:51 GMT
  • குடியிருப்புக்குள் இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

குடியிருப்புக்குள் இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News